செய்திகள் :

Yash: ``எனக்கு பேய் படம்னா பயம், பார்க்கமாட்டேன்" - திரையில் மிரட்டும் ராக்கி பாய் கலகல டாக்!

post image

KGF திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவர், பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் நிதீஷ் திவாரி, மெகா பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான ' ராமாயணம் ' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் யஷ், லங்கேஷ்வரனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லரில், ராவணனாக யஷின் கம்பீரமான தோற்றமும், கம்பீரமான குரலும் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியது. இப்படத்தின் முதல் பாகம், தீபாவளியன்று நவம்பர் 8 அன்று உலகெங்கும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனுடன், கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்ஸிக்' என்ற தீவிரமான டார்க் ஆக்ஷன் திரில்லர் படத்திலும் யஷ் நடித்திருக்கிறார்.

நடிகர் யாஷ் - ராமாயணா
நடிகர் யாஷ் - ராமாயணா

இந்த நிலையில், நடிகர் யாஷ் சமீபத்தில் வெரைட்டி இந்தியாவுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் தன்னைப்பற்றி சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில், ``நான் பேய் படங்கள் அல்லது திகில் சார்ந்த படங்களைப் பார்க்கமாட்டேன். எனக்கு பயப்படுவது சுத்தமாகப் பிடிக்காது. பயப்படுவதற்காக நாம் ஏன் தியேட்டருக்குப் போய் பணம் செலவழிக்க வேண்டும்? திகில் படங்களைப் பார்ப்பது தேவையில்லாமல் நமது இதயத் துடிப்பை அதிகரிக்கும்.

அதனால்தான் நான் அந்த வகைப் படங்களிலிருந்து விலகி இருக்கிறேன். ஒரு திரைப்படம் என்பது நம்மை முழு மனதுடன் ரசித்து, உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர, பயத்தில் நடுங்க வைப்பதாக இருக்கக்கூடாது" என்று யஷ் சிரித்துக்கொண்டே கூறினார்.

மலைகளையே நொறுக்கும் அளவுக்கு வலிமையான உடல்மொழியுடன் திரையில் தோன்றும் ராக்கிங் ஸ்டார், நிஜ வாழ்க்கையில் தனக்கு திகில் படங்களைக் கண்டு பயம் என்று கூறுயதை `என்னது ராக்கி பாய்க்கு, திகில் படம்னா பயமா!' என ரசிகர்கள் விளையாட்டாக கிண்டல் செய்து வருகின்றனர்.

"அன்பைப் பரப்புவதே என்னுடைய புரட்சி!" - விமர்சனங்களுக்கு பதிலடி தந்த 'சிக்மா' பட நடிகை ஃபரியா

டோலிவுட்டில் 'ஜதி ரத்னாலு' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபரியா அப்துல்லா. தற்போது இவர் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத்தில்... மேலும் பார்க்க

``நான் செல்ஃபி கூட எடுப்பதில்லை" - நடிகர் நாகர்ஜுனா ஓபன் டாக்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோ "சுரக்ஷா கா திரங்கா" சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்வில் நடிகர் நாகார்ஜுனா கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் உரைய... மேலும் பார்க்க

``சொத்துகளைப் பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிடுங்கள்" - மூத்த நடிகரின் ஆசையும் குடும்பத்தாரின் முடிவும்!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ரங்கநாத் (66) தற்கொலையைத் தொடர்ந்து அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என அவரின் மகன் தெரிவித்திருக்கிறார். 1949-ல் சென்னையில் பிறந்த இ... மேலும் பார்க்க

Anupama: "என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" - செய்தியாளரின் கேள்விக்கு அனுபாமா பதில்

தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரனுக்கு 'கிரேஸி கல்யாணம்' படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அனுபமா பரமேஸ்வரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரு... மேலும் பார்க்க

ராஷ்மிகா மந்தனாவுக்குப் படுகாயம்; 6 வாரங்கள் ஓய்வெடுக்க சொன்ன மருத்துவர்கள்; என்ன நடந்தது?

நடிகை ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்திருக்கிறார். இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'மைசா' படத்த... மேலும் பார்க்க

Allu Arjun: "பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே காத்திருங்கள்" - சர்ச்சையான அல்லு அர்ஜுன் ஸ்பீச்

ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன், இணையத்தில் நடக்கும் ரசிகர்கள் சண்டை மற்றும் ட்ரோல்கள் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போது அவர், "எனது ரசிகர்கள் மற்றும் எ... மேலும் பார்க்க