செய்திகள் :

Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக - எப்படி?

post image

2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் கலவரம் தொடங்கியது.

கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என அந்தப் பகுதியில் பல்வேறு கொடூரங்கள் நடந்தேறிக்கொண்டே இருந்தன.

இந்தக் கலவரத்தைத் தடுக்க தவறிவிட்டார் என்றும்... கலவரத்தைச் சரிவர கையாளவில்லை என்று அந்த மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் பிரேன் சிங்கின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் பின், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

யும்னம் கெம்சந்த் சிங் | Yumnam Khemchand
யும்னம் கெம்சந்த் சிங் | Yumnam Khemchand

ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. இப்போது மணிப்பூரின் பாஜக தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றுள்ளார்.

அடுத்ததாக, இவர் மணிப்பூரின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

PTI-ன் தகவலின் படி, பெண் தலைவரான நெம்சா கிப்கென் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

யும்னம் கெம்சந்த் சிங் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். நெம்சா கிப்கென் குக்கி இனத்தைச் சேர்ந்தவர். இரு இனங்களுக்கு இடையே பேலன்ஸ் செய்யவே, பாஜக இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points

இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்திய நேரப்படி, நேற்று இரவு, இந்திய பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அந... மேலும் பார்க்க

'இந்தியா ஒரு காலனி அல்ல'- அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தம் குறித்து ஜோதிமணி விமர்சனம்

அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அதன்படி இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% இருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. ... மேலும் பார்க்க

திண்டிவனம்: பேருந்து நிலையத்துக்கு வைக்கப்பட்ட கலைஞர் பெயர் நீக்கம் - அதிரடி அரசாணையின் பின்னணி!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கடந்த 55 ஆண்டுக்காலமாகச் செயல்பட்டு வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம், இட நெருக்கடி காரணமாகவும், கட்டடங்கள் பழுதடைந்த காரணத்தாலும் இடிக்கப்பட்டது. அதையடுத்து தீ... மேலும் பார்க்க

ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!

நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக `அமளி அனல்' தகித்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் கையிலெடுத்த `சீன ஊடுருவல்' விவகாரம்தான். ‘Four S... மேலும் பார்க்க