செய்திகள் :

"அண்ணாமலைக்கும், ஆட்டு மந்தை போல் பின்னால் போனவர்களுக்கும் பாஜக-வின் கொள்கை புரியவில்லை" - இப்ராஹிம்

post image

"பள்ளிகளில் இந்து மத அடையாளங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில், இஸ்லாமிய நம்பிக்கையான புர்காவிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக சிறுபான்மை அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம்.

கிருஷ்ணகிரி பாஜக கூட்டத்தில்
கிருஷ்ணகிரி பாஜக கூட்டத்தில்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மை அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது.

சொன்னபடி சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளோம். அயோத்தியில் நீதிமன்றத் தீர்ப்பின்படி ராமர் கோயிலைக் கட்டியுள்ளோம். கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி ஏழை மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழேயிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ஊழல் இல்லாமல் ஒரு பிரதமர் இருப்பதே இந்த நாட்டில் பெரிய ஆச்சரியம்தான். அதுமட்டுமின்றி கடந்த 12 ஆண்டுகளில் அமைச்சரவையில் ஒருவர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் தூய்மையான ஆட்சி நடத்தியிருக்கிறார்.

மாநிலங்களுக்கான உரிமைகளை மதித்து ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைக் கலைத்ததில்லை.

வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம்

நம்பி வாக்களித்த மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை விஜய் நிறைவேற்றினாரா? ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடம் தமிழகம் முழுக்க பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றினாரா? இதுதான் கவர்ச்சி அரசியல்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த மூன்றாவது நாளே பெண்களுக்கு இலவசப் பேருந்து பயண வாக்குறுதியை நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1 கோடியே 30 லட்சம் ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 1500 வழங்கும் திட்டம் தடையின்றி செயல்படுகிறது.

தமிழகத்தில் பாட்டிலுக்கு ரூ. 10 வசூலிப்பதாகப் பாட்டுப் பாடிய விஜய், இன்று எல்லா மதுக்கடையிலும் கூடுதலாக ரூ. 20 வசூலிப்பதைத் தடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கரூர் வரை சென்று கிண்டல் செய்தார்கள். ஆனால் இன்று மதுவிலக்குத்துறை அமைச்சராக இருக்கும் விக்னேஷின் கிணத்துக்கடவு தொகுதியில், பேருந்து நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகிலேயே சாராயக் கடைகள் செயல்படுகின்றன. பாட்டிலுக்கு ரூ. 20 கூடுதலாக வசூலிப்பதை நான் ஆதாரத்தோடு வெளியிட்டேன்.

விஜய்
விஜய்

பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் குஜராத், பீகார், நாகாலாந்து போல் முழுமையான மதுவிலக்கு கொண்டு வரப்படும். உத்தரப் பிரதேசத்தைப் போலத் தமிழகத்திலும் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இங்கு தவெக நிர்வாகி ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாவுக்கட்டு போடவில்லை.

பள்ளிகளில் ஹிந்து மத அடையாளங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில், இஸ்லாமிய நம்பிக்கையான புர்காவிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்படுகிறது?

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விஷயத்தில் திமுக, இந்துக்களின் மனதைப் புண்படுத்தியது போல நாங்களும் செய்வோம் என இவர்கள் பேசுகிறார்கள். திமுக-வின் கொள்கைதான் இவர்கள் கொள்கை என்றால் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்கள்?

கொள்கை இல்லாதவர்களால் கட்சியில் நீடிக்க முடியாது. பாஜக-வில் தேசம் முதன்மையானது என்ற மனப்பான்மையோடுதான் இணைவார்கள். அண்ணாமலையாக இருக்கட்டும், அவர் பின்னால் போகும் ஆட்டு மந்தையாக இருக்கட்டும், அவர்களுக்கு கட்சியின் கொள்கை புரியவில்லை.

ஊடகங்களில் சரளமாகப் பேசி, எதிர்க்கட்சிகளைத் தாக்கினால் மட்டும் போதும் என நினைக்கிறார்கள். அப்படி நினைத்தவர்கள் வெளியேறியுள்ளனர், இதனால் பாஜகவிற்கு எந்த இழப்பும் இல்லை.

அண்ணாமலை
அண்ணாமலை

கடந்த காலத்தில் கல்யாண் சிங், உமாபாரதி, எடியூரப்பா போன்ற பெரும் தலைவர்கள் கட்சியை விட்டுச் சென்றாலும், மீண்டும் திரும்பி வந்தனர். சித்தாந்த அடிப்படையில் அண்ணாமலை பேசியது உண்மையாக இருந்தால் தெளிவு பெற்று திரும்புவார், சில்லறைகளுக்காகச் சென்றிருந்தால் வரமாட்டார், அப்படிப்பட்டவர்கள் எங்களுக்குத் தேவையும் இல்லை" என்றார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க