செய்திகள் :

`அமெரிக்க பேச்சுவார்த்தையில் இந்தியா அவசரம் காட்டவில்லை' - காரணம் சொல்லும் வர்த்தக செயலாளர்

post image

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா இந்தியாவின் மீது முதலில் 25 சதவிகித வரி விதித்திருந்தது. பின்னர், இந்தியா ரஷ்யா உடன் வர்த்தகம் செய்கிறது என்று கூடுதல் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆக, தற்போது இந்தியா மீது 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியா ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சுமையை இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சரிசெய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜேஷ் அகர்வால்
ராஜேஷ் அகர்வால்
அந்தப் பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது என்பதை FICCI ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

"இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு நல்ல முடிவை எட்டுவோம் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால், எந்தவொரு பேச்சுவார்த்தையும் இந்த நாளுக்குள் முடிவுக்கு வருமென்று இறுதி நாளை கூறமுடியாது. காரணம், ஏதாவது ஒரு தரப்பில் திருப்தி ஏற்படவில்லை என்றாலும், அந்தப் பேச்சுவார்த்தை முடிவை எட்டாது.

இரு பேச்சுவார்த்தைகள்

தற்போதைய உலகளாவிய வர்த்தகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஒன்று தான், அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி.

இதனால், இந்தியா மற்றும் அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரியை நீக்கும் உடனடி கட்டமைப்பு வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நம்முடைய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மூலம் பரஸ்பர வரியை முழுமையாக நீக்கும் வழியை பார்க்க வேண்டும். அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

காரணம், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இதுபோன்ற பல்வேறு அம்சங்களில் பணிபுரிந்து வருவதால், அதில் அவசரம் காட்டவில்லை" என்று கூறியிருக்கிறார்.

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க