செய்திகள் :

'அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகிறது?' - ட்ரம்ப் சொல்வது என்ன?

post image

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை நிறுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுபறியாகவே இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா - ட்ரம்ப் - ஈரான்
அமெரிக்கா - ட்ரம்ப் - ஈரான்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் இன்று கையொப்பமாகும்.

ஒப்பந்தம் இறுதியானதும் ஹோர்முஸ் நீரிணை உடனே திறக்கப்படும். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் பிப். மாத இறுதியில் இருந்து நிலவும் மோதல் முடிவுக்கு வரும்.

ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்குத் தடை விதிக்கும் வகையில் ஒப்பந்தம் இருக்கும்.

அனைத்தும் சுமுகமாக முடிந்தால் ஈரானில் மீதமுள்ள அணு ஆயுதங்களையும் அமெரிக்கா அழிக்கும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

முந்தைய ஒபாமா அரசாங்கத்தைப் போல ஈரானுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களையோ அல்லது 1.7 பில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையோ இந்த முறை அமெரிக்கா வழங்காது.

இந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு பணப் பரிமாற்றமும் இருக்காது” என்று தெரிவித்திருக்கிறார்.

``பாஜகவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி; மோடியைத்தான் கட்டிப்பிடிப்பார்" - பினராயி விஜயன் விமர்சனம்

ஜூன் 8 - அன்று 'இந்தியா' (INDIA) கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர். 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே, சிபிஐ(எம்)-ன் பொது... மேலும் பார்க்க

அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் ?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஜிகே வாசன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. ... மேலும் பார்க்க

சுட்டிக் காட்டிய ஜூ.வி... ஆக்சனில் இறங்கிய அமைச்சர்... வைகை அணை தூர்வாருவது குறித்து ஆய்வு

மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதரமாக இருப்பது வைகை அணை.அதோடு வைகை அணையிலிருந்து வரும் நீரை வைத்தே இந்த மாவட்டங்களிலெல்லாம் விவசாயம் நடைப்பெற்று வருக... மேலும் பார்க்க

"அண்ணாமலைக்கும், ஆட்டு மந்தை போல் பின்னால் போனவர்களுக்கும் பாஜக-வின் கொள்கை புரியவில்லை" - இப்ராஹிம்

"பள்ளிகளில் இந்து மத அடையாளங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில், இஸ்லாமிய நம்பிக்கையான புர்காவிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக சிறுபான்மை அணியின் தேசிய... மேலும் பார்க்க

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க