செய்திகள் :

பீகார்: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 22 வயது பெண்; பஞ்சாயத்திற்கு வந்த விவகாரம்; என்ன நடந்தது?

post image

பீகார் மாநிலம் மதுபுரா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர் பூஜாகுமாரி(22). இவருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பித்து குமார்(17) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்திலும் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்த பிரச்னை பஞ்சாயத்திற்குச் சென்றது. பஞ்சாயத்தில் இது குறித்து விசாரித்து தம்பதியைப் பிரித்துவிட முடிவு செய்தனர்.

அதோடு விசாரணையில் பையன் வீட்டினர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என்றும், அந்தப் பணம் பெண் வீட்டிற்குக் கொடுக்கப்படவேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். பஞ்சாயத்திலேயே பூஜாவை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி தங்களது வீட்டிற்கு இழுத்துச்சென்றனர்.

வீட்டிற்கு வந்த பிறகு அப்பெண்ணை பூஜாவின் பெற்றோர் அடித்து உதைத்தனர். பூஜாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினர். அவர்கள் பூஜாவை வீட்டிற்கு வெளியில் போட்டு அடித்து உதைத்தனர்.

பூஜாவின் கழுத்தில் அவரது தந்தை மிதித்துக்கொண்டிருந்தார். பட்டப்பகலில் நடுத்தெருவில் நடந்த இச்சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் பரவியது. உடனே இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அப்பெண்ணைத் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்தனர். அப்பெண் முறைப்படி எழுத்துப்பூர்வமாகப் புகார் செய்துள்ளார்.

செயற்கை கருத்தரிப்பு மைய குளறுபடியால் மாறிய கரு? "பிறந்தது எங்கள் குழந்தைகள் அல்ல" - தம்பதி புகார்

டெல்லி அருகில் உள்ள குருகிராமைச் சேர்ந்த தம்பதியான ராகுல் மற்றும் மீனு தம்பதி செயற்கை முறையில் (Vitro Fertilisation) குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக டெல்லியில் உள்ள டாக்டர் கைலாஷ் கருத்... மேலும் பார்க்க

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க