செய்திகள் :

"அவன் அடிச்சா அண்டார்டிகாவே அதிரும்!" - 29 பந்துகளில் 94 ரன்கள்... ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி!

post image

"பொறுமையாக ஆடும் ஆட்டம் நமக்கு செட் ஆகாது போல, நமக்கு எப்போதுமே சிக்ஸர் மட்டும்தான்!" என்பதைப் போல தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, இலங்கை பந்து வீச்சாளர்களை பந்தாடினார், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஐபிஎல் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, மிகக் குறைந்த வயதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், இந்த தொடரில் பெரிய இன்னிங்ஸ் எதையும் ஆடாமல் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்திருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் பொறுமையாக விளையாட வேண்டிய கட்டாயம் இருப்பதால், அது வைபவின் இயல்பான ஆட்டத்திற்கு செட் ஆகாத காரணத்தால், அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தார். ஆனால் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, தனது பழைய ஃபார்மை மீட்டெடுத்து இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடினார். இலங்கை பந்து வீச்சை அனைத்து திசைகளிலும் சிதறடித்த அவர், வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஒரு கட்டத்தில் இது ஐபிஎல் போட்டியா, இல்லை ஒருநாள் போட்டியா என்று ரசிகர்களே குழம்பிப் போனார்கள்.

சூர்யவன்ஷி

அதன்பிறகும் விடாமல் தாக்குதல் ஆட்டத்தைத் தொடர்ந்த அவர், கடந்த போட்டியில் இலங்கை அணியினர் வம்பிழுத்த காரணத்தை மனதில் வைத்து கொண்டு இலங்கை பவுலர்களை வெளுத்து வாங்க ஆரம்பித்தார். 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என விளாசிய அவர், வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து, சதத்தைத் தவறவிட்டார்.

ஆனாலும், இந்தப் போட்டியில் அவர் ஆடிய விதம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவரது அதிரடி ஆட்டம், இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

"என்னுடன் மோத தைரியம் இருக்கிறதா?'- ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்; மீண்டும் ஆரம்பமாகும் மோதல்

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப்பெரிய சர்ச்சை ஆனது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டத... மேலும் பார்க்க

IND vs Pak: இந்தியா - பாகிஸ்தான் வீராங்கனைகளிடையே களத்தில் மோதலா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், நேற்று (ஜூன். 14) நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது நடந்த... மேலும் பார்க்க

"நான் யார்ன்னு சொல்லியும் போலீஸ் என்ன அடிச்சாங்க" - வங்கதேச வீரர் பரபரப்புக் குற்றச்சாட்டு

வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன், சட்டோகிராம் பகுதியில் தன்னை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். வங்கதேச கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ... மேலும் பார்க்க

'10 வயதில் சதம்' - அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் உலகமே தற்போது இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே சூர்யவன்ஷி குடும்பத்தில் இருந்து இன்னொரு கிரிக்கெட் சூறாவளி உருவாகிவி... மேலும் பார்க்க

"தென்னாப்பிரிக்க அணியில் இப்படிப்பட்ட ஓர் இளம் வீரர் இல்லை.!" - சூர்யவன்ஷியை புகழ்ந்த டேல் ஸ்டேயின்

தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் இந்திய இளம் வீரர் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி,... மேலும் பார்க்க

'நியூசிலாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது..!'- ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஓய்வு குறித்து பேசியிருக்கும் கேன் வில்லியம்சன், " சர்வதேச கிரிக்கெட்... மேலும் பார்க்க