செய்திகள் :

"அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பிறகு மக்களும் அரசியலுக்குள் வந்துட்டாங்க!" - லிங்குசாமி

post image

வருடந்தோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைகூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் அப்போட்டிக்கான அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டிருந்தார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமி

இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய் பற்றி இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், "தேர்தல் முடிவுகல் சமயத்துல என்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து, முடிவுகளைப் பார்ப்போமானு கேட்டேன். 'எனக்கு என்னமோ மேஜிக் நடக்கப் போகுதோ என்று தோணுது' என்று ஷங்கர் சார்கிட்டயும் சொன்னேன்.

பிறகு எங்க வீட்டுக்கு முடி வெட்டுவதற்கு ஒரு தம்பி வருவாரு. அவர்கிட்ட 'ஓட்டு போட்டுட்டீங்களா' என்று கேட்டேன்.

அவர் 'போட்டேன் சார். எப்பவும் எங்க வீட்டுல 12 ஓட்டு. வழக்கமாக திமுக-வுக்குத்தான் ஓட்டு போடுவோம். ஆனா, இந்தத் தடவை எங்க வீட்ல 8 பேர் தவெக-வுக்குப் போட்டோம்' என்று சொன்னார்.

பிறகு எங்க வீட்டுக்கு வந்த பிளம்பர்ல தொடங்கி நிறைய பேர் என்கிட்ட தவெக-வுக்குத்தான் ஓட்டு போட்டதாகச் சொன்னாங்க. 'எல்லோரும் தவெக-வுக்குதான் ஓட்டு போட்டேன்னு சொல்றாங்களே'னு அப்போவே என்னமோ நடக்கப் போகுது என்று தோணுச்சு. இன்னைக்கு இவ்வளவு பெரிய மேஜிக் நடந்திருக்கு.

அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பிறகு மக்களும் அரசியலுக்குள்ள வந்துட்டாங்க. சட்டசபையில ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதுனால தொடர்ந்து பார்க்கிறோம். அதுவும் இப்போ மதிப்புமிக்க ஃபுட்டேஜ்-ஆக மாறிடுச்சு" என்றவர், "தயாரிப்பாளர் சௌத்ரி சார் மறைவின்போது அவருக்கு அஞ்சலி செலுத்த விஜய் வந்திருந்தாரு.

இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமி

போகும்போது அவர் காரில் ஏறிட்டார். அப்போது என்னைப் பார்த்தவர் மறுபடியும் வெளியே இறங்கி வந்து எனக்குக் கைகொடுத்துப் பேசினாரு. காரிலிருந்தே கண்ணாடி வழியாகவே எனக்கு அவர் கை காட்டியிருக்கலாம்.

ஆனா, இறங்கி வந்து பேசினார். அப்போ நான் அவர்கிட்ட 'இது பெரிய நிகழ்வு'னு வாழ்த்து சொன்னேன். அவரும், 'ரொம்ப சந்தோஷம்ணா, வீட்டுல மீட் பண்ணுவோம்' என்று சொல்லிட்டு கிளம்பிட்டார். அந்த இடத்துக்காக அவர் உழைச்சிருக்கார்.

விஜய் சார் காலத்தோடு ரொம்பவே கனெக்டிவாக இருப்பார். ஷூட்டிங்கிற்குச் சொன்ன நேரத்திற்கு வந்து நிப்பாரு. அதுனாலதான் காலம் அவங்களுக்கு இதைத் திரும்பக் கொடுத்திருக்கு" எனப் பேசினார்.

"மரணத்தின் விளிம்பு வரை சென்ற இயக்குநரை லிங்குசாமிதான் போராடி மீட்டார்" - பகிரும் ஏ.ஆர். முருகதாஸ்

வருடந்தோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைக்கூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் அப்போட்டிக்கான அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டிர... மேலும் பார்க்க

அந்தரன்: "பிரஜின் உடைஞ்சு அழுவதைப் பார்த்திருக்கேன்; ரொம்ப வருஷ கனவு இது" - சாண்ட்ரா எமோஷனல்

பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அந்தரன்’. சந்தோஷ் இராவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன் 2) நடைபெற்ற... மேலும் பார்க்க

Killer: எஸ்.ஜே.சூர்யா படத்தின் படப்பிடிப்பில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்; என்ன நடந்தது?

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' திரைப்பட படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 3 பேர் காயம் அடைந்திருக்கின்றனர்.இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது 'கில்லர்'... மேலும் பார்க்க

கருப்பு: ``அதே அன்பு, அரவணைப்பு, கனிவு" - முதல்வர் விஜய்யைச் சந்தித்த ஆர்.ஜே பாலாஜி!

தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தமிழ்த் திரையுலகிலும் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும் வேளையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்யை, பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி நேரில் சந்தித்து வ... மேலும் பார்க்க

"'வாழை' படத்தின் ஒரு பகுதியாக 'மஞ்சணத்தி' இருக்கும்; ஆனால்..."- மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட் என்ன?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பைசன் காளமாடன்'. தீபாவளிக்கு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 'பைசன்... மேலும் பார்க்க

"`எனக்கு சொந்தம் இல்ல; நீங்கதான் இறுதி சடங்கு செய்யணும்'னு சத்யேந்திரா சொன்னார்"- உதவும் கரங்கள் பகு

நடிகரும் திரைப்பட விமர்சகருமான சத்யேந்திரா கடந்த வாரம் இயற்கை எய்தினார். சினிமா சார்ந்த நிகழ்வுகள் எங்கு நிகழ்ந்தாலும் அங்கு சத்யேந்திரா இருப்பார். பெங்களூருவைச் சேர்ந்தவர் பல ஆண்டுகளாகச் சென்னையில் த... மேலும் பார்க்க