செய்திகள் :

"'வாழை' படத்தின் ஒரு பகுதியாக 'மஞ்சணத்தி' இருக்கும்; ஆனால்..."- மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட் என்ன?

post image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பைசன் காளமாடன்'.

தீபாவளிக்கு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 'பைசன் காளமாடன்' திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

'பைசன் காளமாடன்' படத்தின் ப்ரோமோஷன் வேளையிலும், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதாக மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருந்தார்.

Manjanathi - Mari Selvaraj- ilayaraja
Manjanathi - Mari Selvaraj- ilayaraja

இந்நிலையில், மாரி செல்வராஜின் 6-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு நேற்று (மே.1) வெளியானது. படத்திற்கு 'மஞ்சணத்தி' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில் இன்று 83-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளையராஜாவுக்கு மாரிசெல்வராஜ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாரி செல்வராஜ், "இளையராஜாவின் 83-வது வயதில் அவருடன் இணைந்து என்னுடைய 6-வது படத்தை இயக்குகிறேன். வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான தருணம் என்று நினைக்கிறேன்.

ராஜா சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது ஒரு ஏக்கமாகவே இருந்தது. அவர் என்னுடைய சினிமா வேலைகள் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார். என்னுடன் அவர் பழகும் விதமும், பிள்ளையாக நினைக்கின்ற விதமும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

Manjanathi - Mari Selvaraj
Manjanathi - Mari Selvaraj- ilayaraja

நிச்சயமாக நான் அவருக்குக் கொடுக்கும் அன்பாக இந்த 'மஞ்சணத்தி' இருக்கும். மஞ்சணத்தி படத்தை எழுதும்போதே இளையராஜாவை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதினேன்.

மனதிலும், புத்தியிலும் இசையை வைத்துக் கொண்டே எழுதிய படம்தான் 'மஞ்சணத்தி'. இளையராஜா மீது எனக்கு தீராக் காதல், அதை வெளிப்படுத்தும் விதமாகவே அவரைப் பார்க்கும்போதெல்லாம் முத்தம் கொடுக்கிறேன். 'வாழை' படத்தின் ஒரு பகுதியாக 'மஞ்சணத்தி' இருக்கும். ஆனால் அதன் இரண்டாம் பாகமாக 'மஞ்சணத்தி' இருக்காது'' என்று கூறியிருக்கிறார்.

"`எனக்கு சொந்தம் இல்ல; நீங்கதான் இறுதி சடங்கு செய்யணும்'னு சத்யேந்திரா சொன்னார்"- உதவும் கரங்கள் பகு

நடிகரும் திரைப்பட விமர்சகருமான சத்யேந்திரா கடந்த வாரம் இயற்கை எய்தினார். சினிமா சார்ந்த நிகழ்வுகள் எங்கு நிகழ்ந்தாலும் அங்கு சத்யேந்திரா இருப்பார். பெங்களூருவைச் சேர்ந்தவர் பல ஆண்டுகளாகச் சென்னையில் த... மேலும் பார்க்க

"அன்றைய காலகட்ட அரசியலால் 'பருத்திவீரன்' படத்துக்காக எனக்கு விருது கிடைக்கல" - இயக்குநர் அமீர்

பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள `ஈரம் காயாத கதைகள்' புத்தக வெளியீட்டு விழா நேற்று (மே.31) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் பேசியபோது, "என்னுடைய சினிமா ஆர்வத்துக்கு எ... மேலும் பார்க்க

ஹீரோவாக இரண்டாவது படம் - கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' அபிஷன் ஜீவிந்த்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். அப்படத்தில் சிறியதொரு கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றவர், அடுத்ததாக நாயகனாகவே நடிக்கக் ... மேலும் பார்க்க

"LIK படத்தின் வசூலை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" - விக்னேஷ் சிவன் கவலை

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படத்திற்கு இணையத்தில் பரவிய விமர்சனங்கள் படத்திற்க... மேலும் பார்க்க

"தனுஷ் அரசியலுக்கு வருவாரா?" - தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பதில் என்ன?

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "இன்றைய பிள்ளைகளுக்கு படிப்... மேலும் பார்க்க

Mari Selvaraj: 'அந்த தருணம்'; இளையாராஜா - மாரி செல்வராஜ் கூட்டணி - வெளியான 'மஞ்சணத்தி' பட அறிவிப்பு!

மாரி செல்வராஜ் தன்னுடைய 6-வது படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோரை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த 'பைசன் காளமாடன்' திரைப்படம், கடந்தாண்டு தீபாவளி வெள... மேலும் பார்க்க