செய்திகள் :

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

post image

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாள். சிறுமியின் பெற்றோர் மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் சிறுமியைக் காணவில்லை. அவர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி எங்கேயும் கிடைக்கவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்த கிராமத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த 25 வயது சாஹில் என்ற வாலிபர் என்று தெரியவந்தது. சாஹில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாஹிலிடம் தீவிர விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சிறுமியை ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்குள்ள கால்வாய் அருகே மரத்திற்கு அடியில் கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுமியின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் நாசிக்-புனே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த போலீஸார், ``இக்குற்றத்தில் ஈடுபட்ட சாஹில் கிராம மக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்களோடு சேர்ந்து சிறுமியை தேடினான். சிறுமியின் பெற்றோர் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர் என்பதை தெரிந்து கொண்டு இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளார்" என்று தெரிவித்தனர்.

இது குறித்து துணை முதல்வர் சுனேத்ரா பவார் கூறுகையில், ``இது மிகவும் துரதிஷ்டவசமான ஒன்று. வெளிப்படையாக போலீஸார் இவ்வழக்கை விசாரித்து குற்றவாளி தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார். இவ்வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் கேட்டுக்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க

கரூர்: மர்மமான முறையில் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு; உறவினர்கள் தர்ணா! - போலீஸார் விசாரணை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பாலசுப்பிரமணியம் என்பவர் பணியாற்றி வந்தார். பாலசுப்பிரமணியம், தனது மனைவி நீலவ... மேலும் பார்க்க