செய்திகள் :

`இன்றுடன் உண்ணாவிரதத்தை முடிக்கிறாரா சோனம் வாங்சுக்?' - அவர் கூறும் 3 நிபந்தனைகள் என்ன?

post image

இந்தியச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிராதப் போராட்டத்தை தொடங்கி இன்றோடு 22 நாள்கள் ஆகின்றன.

அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், நேற்று முன்தினம் (ஜூலை 18, 2026), டெல்லி அரசு மருத்துவமனை ஆன சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை சோனம் வாங்சுக்கும், அவரது மனைவி கீதாஞ்சலியும் 'சட்டவிரோதக் காவல்' என்று குறிப்பிடுகிறார்கள்.

நீட், க்யூட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தான் சோனம் வாங்சுக் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

தான் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் சோனம் வாங்சுக். அவை...

``நான் எப்போது உண்ணாவிரதத்தை முடிப்பேன்..!

எனது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், 'சன்சத் சலோ' (நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம்) மார்ச் பேரணி முடியும் வரை எனது உண்ணாவிரதம் தொடரும். பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே அது கைவிடப்படும்…

அன்பான நண்பர்களே, ஆதரவாளர்களே,

உங்களில் பலர் நான் எப்போது உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று கேட்டுள்ளீர்கள். ஏற்கனவே ஆதரவாளர்களிடம் குறிப்பிட்டது போல, வரும் ஜூலை 20 அன்று நான் எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன்... ஆனால், அதற்கு இந்த நிபந்தனைகள் நிறைவேற வேண்டும்.

> சமீபகாலமாக கல்வி முறையில் ஏற்பட்டுள்ள தோல்விகள்—வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

> நானும் சி.ஜே.பி அமைப்பின் தலைவர்களும் நாடாளுமன்றத்தின் வாசலைச் சென்றடையும் போது, அங்குள்ள மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த விவகாரத்தை இப்போது நாடாளுமன்றத்தில் கையில் எடுப்போம் என்று எங்களிடம் உறுதியளிக்க வேண்டும்.

> ஒருவேளை எனது உடல்நிலை அல்லது இதர காரணங்கள் இதற்கு இடம் தராவிட்டால், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நான் இருக்கும் இந்த மருத்துவமனைக்கு நேரில் வந்து மேற்கண்ட உறுதிமொழியை வழங்க வேண்டும்."

எனக் குறிப்பிட்டுள்ளார்.

CJP: ``நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒத்திவைப்பு" - சு. வெங்கடேசன்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடு... மேலும் பார்க்க

'தோலை உரிப்பேன், எலும்பை உடைப்பேன்' - முதல்வரை 'இறங்கி' அட்டாக் செய்வதன் பின்னணியும் பின்விளைவும்

'சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்' என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.திமுகவில் ஏற்கனவே வெற்... மேலும் பார்க்க

CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசு தேர்... மேலும் பார்க்க

CJP: மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்த சிஜேபி அமைப்பினர் - கொடுத்த கடிதத்தில் என்ன இருந்தது?

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் போராட்ட... மேலும் பார்க்க

`பாஜக-வை கோபப்படுத்தாத நாடாளுமன்ற அரசியலை நோக்கி.!' - திமுக, பாஜக கைகோர்க்குமா?

தவெக-வின் வெற்றி தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளைப் பெரிய அளவில் மாற்றியமைத்து வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பிரதானக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. அந்தவகையில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

``முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலக்க கேரள அரசு அனுமதிக்கக் கூடாது" - ஜெகநாத் மிஸ்ரா

தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் ... மேலும் பார்க்க