செய்திகள் :

'இவன் பெயரே வரலாறு...' - நியூசிலாந்தை கதிகலங்க வைத்த சாம்சன்!

post image

சாம்சன் என்றால் நிலையற்றத்தன்மை, சாம்சன் என்றால் கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர். இப்படித்தான் இத்தனை நாளும் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இனிமேல் அப்படி இருக்கப்போவதில்லை . சாம்சன் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தன் பெயரை வலுவாக பதித்திருக்கிறார். உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை உச்சத்தில் ஏற்றி வைக்கும் வகையில் ஒரு இன்னிங்ஸை ஆடியிருக்கிறார்.

Samson
Samson

இந்த உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 தொடரில் ஆடியிருந்தது. அந்தத் தொடரின் 5 போட்டிகளிலும் சேர்த்தே சாம்சன் 46 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஒரு போட்டியில் டக் அவுட்டும் ஆகியிருந்தார். சாம்சன் மீது எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தது.

விளைவாக, இந்த உலகக்கோப்பையின் ஆரம்பக்கட்ட போட்டிகளில் அவர் லெவனிலேயே இல்லை. பென்ச்சில்தான் உட்கார்ந்திருந்தார். அவர் முதல் ஆப்சனாக பார்க்கப்படவே இல்லை. தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் என வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்திருந்தனர்.

சரியான சமயத்தில் சாம்சனின் தேவையும் ஏற்பட்டது. இந்திய அணியின் டாப் ஆர்டர் ஸ்பின்னர்களால் நிறைந்திருப்பதால் எதிரணிகள் மிக எளிதாக ஆப் ஸ்பின்னர்களை வைத்து கட்டம் கட்டினர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியும் அடைந்திருந்தது. அதன்பிறகுதான் ஒரு வலது கை வீரர் வேண்டுமென சாம்சனை லெவனுக்குள் கொண்டு வந்தார்கள்.

Samson
Samson

சூப்பர் 8 இல் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக அது கிட்டத்தட்ட காலிறுதிப் போட்டி மாதிரி. தோற்றால் இந்திய அணி வெளியே செல்லும். அந்தப் போட்டியில் நின்று 97 ரன்களை அடித்து போட்டியை முடித்துக் கொடுத்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதி. அதுவும் அழுத்தமிக்க போட்டி. அந்தப் போட்டியிலும் அதிரடியாக ஆடி 89 ரன்களை அடித்து இந்திய அணி 250 + ரன்களை எடுக்க காரணமாக இருந்தார்.

இதோ இப்போது இறுதிப்போட்டி. சாம்சன் தொடர்ச்சியாக சொதப்பி அணியிலிருந்து டிராப் ஆக காரணமாக இருந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக. மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் முதல் 4 பந்துகளை பார்த்து டிபன்ஸ் ஆடியிருந்தார். 5 வது பந்தை லாங் ஆனின் தலைக்கு மேல் அடித்து சிக்சராக்கியிருப்பார். அவ்வளவுதான், அதற்கு மேல் அவர் அவுட் ஆகும் வரை எந்தத் தடையும் இல்லை. சாம்சனின் இருத்தல் அபிஷேக்குக்கும் உதவியாக இருந்தது. சாம்சன் க்ரீஸில் இருந்ததால் ஸ்பின்னரான க்ளென் பிலிப்ஸை ஒரே ஓவரோடு கட் செய்தார் சாண்டனர். இது அபிஷேக்குக்கு பேருதவியாக இருந்தது.

Samson
Samson

பவர்ப்ளேயை அபிஷேக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். அவர் அவுட் ஆன பிறகு மிடில் ஓவர்களில் இஷான் கிஷனோடு சேர்ந்து அதிரடியை தொடங்கினார் சாம்சன். அவரின் அதிரடிக்கு நியூசிலாந்து வீரர்களிடம் எந்த பதிலும் இல்லை. 16 வது ஓவரில் நீஸமின் பந்தில் 89 ரன்களில் பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

சாம்சன் நினைத்திருந்தால் கடைசி வரை நின்று சௌகரியமாக சதத்தை எட்டியிருக்க முடியும். ஆனால், அணியின் நலன்தான் அவருக்கு பிரதானம். அதனால்தான் அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ரிஸ்க் எடுத்து ஆடினார். சாம்சன் அடித்த இந்த 89 ரன்கள்தான் டி20 உலகக்கோப்பையில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். சாம்சனை இனியும் இரண்டாம்பட்சமாக அணி நிர்வாகம் அணுக முடியாது.

'தீரா சோகம்...' - மீண்டும் தோல்வி; மீண்டும் கண்ணீர்! - நிறைவேறாத நியூசிலாந்து கனவு!

நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு இந்த முறையும் நிறைவேறவில்லை. பேட் கம்மின்ஸ் ஸ்டைலில் இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவேன் எனக் கூறிய சாண்டனரின் சவால் அகமதாபாத்தில் எடுபடவில்லை. உலகக்கோப்பையை வென்... மேலும் பார்க்க

SKY: 'தோனி... ரோஹித்... சூர்யா!' - தடம்பதித்த கேப்டன்களின் வரிசையில் சூர்யகுமார்

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்றிருக்கிறது. தோனி, ரோஹித் வரிசையில் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் தன்னுடைய பெயரையும் இணைத்திருக்கிறார். சூர்... மேலும் பார்க்க

'லட்சம் கண்களும் கோடி இதயங்களும் கொண்டாட!' - உலகக்கோப்பையை வென்று இந்தியா அசத்தல்!

2023 இல் நடந்த ஓடிஐ உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்னமும் நியாயபகம் இருக்கிறது. அகமதாபாத்தில் திரளும் லட்சம் ரசிகர்களையும் அமைதிப்படுத்துவேன் என சொல்லியடித்திருந்தார் பேட் கம்மின்ஸ். கூடியிருந்த அத்த... மேலும் பார்க்க

'சாண்ட்னர் செய்த அந்த ஒரு தவறு; வெளுத்துக்கட்டிய அபிஷேக்!' - இமாலய இலக்கை எட்டிய இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முக்கியமான போட்டி என்றாலே இந்திய ரசிகர்களுக்கு எப்போதும் பதைபதைப்பாகத்தான் இருக்கும். அகமதாபாத்தில் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியும் அதே பதைபதைப்போடுதான் தொடங்கியது. ... மேலும் பார்க்க

Ind v Eng: 'பும்ராவுக்குதான் எல்லா பாராட்டுகளும் போகணும்!' - ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் அதிரடியாக ஆடி 89 ரன்கள் அடித்திருந்த சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. Sa... மேலும் பார்க்க

Ind v Eng : 'பயந்துட்டியா.. உயிரே போயிடுச்சு!' - வெளுத்துக்கட்டிய பெத்தேல்; போராடி வென்ற இந்தியா!

வான்கடேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இமாலய டார்கெட்டை நிர்ணயித்திருந்தது. இங்கிலாந்து வீரர் பெத்தேல் தனது அநாயசமான அதிரடியால் பயம் காட்டினாலும், இ... மேலும் பார்க்க