செய்திகள் :

`ஊழல் செய்பவர்கள் 6 மாதத்திற்குள் வழிக்கு கொண்டுவரப்படுவார்கள்' - நிர்வாகிகளிடம் ஜான் ஆரோக்கியசாமி

post image

தவெகவின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்மட்ட அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலளித்த பேசியுள்ள தவெகவின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, `முந்தைய ஆட்சிக் காலங்களில் உருவான நிர்வாக நடைமுறைகளை மாற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படும்' என்று கூறியுள்ளார்.

பனையூர் தவெக அலுவலகம்

`திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் பல அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் ஊழல் மற்றும் லஞ்ச கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்டு விட்டனர். அவர்களை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. தற்போது மேல்மட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டு நிர்வாக சீர்திருத்தங்களை முதல்வர் தொடங்கியுள்ளார். கீழ்மட்ட அதிகாரிகள் பலரும் கடந்த இரண்டு ஆட்சிகளிலும் பணியாற்றியவர்கள் என்பதால் உடனடியாக மாற்றம் ஏற்படாது' என்றுள்ளார்.

`அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். இன்னும் 6 மாதங்களுக்குள் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளதாக' கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஜான் ஆரோக்கியசாமி பேசியுள்ளார்.

மாற்றி மாற்றிப் பேசும் ட்ரம்ப்; பிடிகொடுக்காத இஸ்ரேல்... முடிவுறாமல் தொடரும் ஈரான் போர்!

'இதுவரையில் இல்லாத அளவிலான தாக்குதல்', 'கடுமையான தாக்குதல்' - இப்படி இரண்டு - மூன்று நாள்களுக்கு ஒருமுறை கூறி வருகிறார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதன்படி, நேற்று மாலை (இந்திய நேரப்படி), ட்ரம்ப் ஈரான் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட தவெக நிர்வாகி; கண்டித்த அண்ணாமலை - தவெக ரியாக்ஷன் என்ன?

தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலை... மேலும் பார்க்க

பிரிந்தவர்கள் இணைவார்களா? மம்தா, சரத் பவார் கட்சிகளை இணைக்கும் பேச்சு - அகண்ட காங்கிரஸ் சாத்தியமா?

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சிகள் மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸில் இணையுமா? திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி முற்றிவரும் நிலையில்... மேலும் பார்க்க

நிதி ஆயோக் கூட்டம்: "திமுக-வின் சாதனைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல்" - உதயநிதி சாடல்

நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்... மேலும் பார்க்க

Vijay: "கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா?" - தவெக அரசுக்கு திமுக கேள்வி

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுப்படிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு அரசியல் தலைவ... மேலும் பார்க்க

கவின் ஆணவப் படுகொலை: கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்!

நெல்லையில் ஐடி பொறியாளர் கவின் கடந்த வருடம் ஆணவக் கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கவின் காதலித்த பெண்ணின் அண்ணன் சுர்ஜித், தந்தை சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி ... மேலும் பார்க்க