செய்திகள் :

"கம்ஃபோர்ட்டான இடத்தை விட்டு வெளியே வந்து புதிய விஷயங்களைச் செய்வதுதான் பிடிக்கும்" - ஜான்வி கபூர்

post image

ராம் சரண், ஜான்வி கபூர் இணைந்து நடித்திருக்கும் 'பெத்தி' திரைப்படம், ஜூன் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ராம் சரண் - பெத்தி திரைப்படம்
ராம் சரண் - பெத்தி திரைப்படம்

டோலிவுட்டில் 'உபெனா' படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரிலீஸையொட்டி படத்தின் ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஜான்வி கபூர் பேசுகையில், "ஒரு நடிகையாக எனக்கு சவால் விடும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் எப்போதும் ரசிப்பேன்.

நமக்கு பழகமில்லாத வித்தியாசமான கதாபாத்திரங்களில் சோதனை முயற்சிகளைச் செய்யும்போதுதான், அது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், கரியர் வாழ்க்கையிலும் வளர்ச்சிக்கு உதவுகிறது.

இது எனக்குள் ஒரு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. என்னுடைய இந்த வேலையிலேயே எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், நம்முடைய கம்ஃபோர்ட் ஜோன் விட்டு வெளியே வந்து புதிய விஷயங்களை எக்ஸ்ப்ளோர் செய்வதுதான்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

நாம் உண்மையில் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ளும் அந்தத் தருணத்தில்தான், ஒரு கலைஞராக நாம் இன்னும் வளர முடியும். திரைத்துறையில் இருக்கும் பிரஷர் குறித்து அதிகமாக யோசித்துக்கொண்டிருக்காமல், என்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்த நான் விரும்புகிறேன்.

இதனை நான் ஒரு அழுத்தமாகப் பார்க்காமல், என்னுடைய பொறுப்பாகவே பார்க்கிறேன். ரசிகர்கள் நடிகர்களாகிய நமக்குக் கொடுக்கும் அன்பிற்கு நாம் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்.

நாம் எந்தவொரு வேலையைச் செய்தாலும், நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நம்முடைய மிகச் சிறந்த பங்களிப்பை அள்ளித் தருவது நம்முடைய கடமை" எனத் தெரிவித்திருக்கிறார்.

Karthi 30: கார்த்தியின் முதல் நேரடி தெலுங்கு படம்; இணையும் மீனாட்சி சௌத்ரி; படப்பூஜை க்ளிக்ஸ்!|Photo

Karthi 30: 'பர்த்டே சர்ப்ரைஸ்!' - நேரடி தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி; இயக்குநர் யார் தெரியுமா? மேலும் பார்க்க

Ram Charan: 'எது பும்ரா ஃபுட்பால் ப்ளேயரா?'; வைரலான காணொளி - மன்னிப்புக் கேட்ட ராம் சரண்!

ராம் சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பெத்தி' திரைப்படம் ஜூன் 4-ம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ஈவென்ட் சமீபத்தில் நடந்திருந்தது. இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர... மேலும் பார்க்க

Rukmini: "யாரும் ஷேர் பண்ணாதீங்க" - பகிரப்படும் AI புகைப்படங்கள்; நடிகை ருக்மிணி வசந்த் புகார்

தன்னுடைய புகைப்படங்களை AI உதவியுடன் சித்திரித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக நடிகை ருக்மிணி வசந்த் புகார் அளித்திருக்கிறார். மேலும், டீப்ஃபேக் உதவியுடன் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு... மேலும் பார்க்க

பிரபாஸ் வீட்டு விருந்து, அல்லு அர்ஜுன் அனுப்பின பொக்கே - 'டார்லிங்' ரீ-ரிலீஸ் பகிரும் இயக்குநர்

கோலிவுட் ரீரிலீஸ் கலாசாரம் இப்போது பக்கத்து மாநில படவுலகங்களில் கொடிகட்டிப்பறக்கிறது. டோலிவுட்டில் கடந்த 2010ல் வெளியான பிரபாஸின் 'டார்லிங்' படம், 16 வருடங்களுக்குப் பின் உலகெங்கும் ரீரிலீஸ் ஆகியிருக்... மேலும் பார்க்க

"வொரி பண்ணாதப்பா, நல்லதே நடக்கும் என நீங்கள் என்னிடம் சொன்னப்போதே..!"- விஜய்க்கு ரவி மோகன் வாழ்த்து

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவத... மேலும் பார்க்க

TVK: "புதிய முதல்வருக்கு எல்லா வளங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்" - விஜய் குறித்து விஜய் தேவரகொண்டா

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போதைய நிலவரப்படி 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற... மேலும் பார்க்க