செய்திகள் :

``கருப்பா இருக்காருன்னு எங்க திருமணத் தருணத்தில் கேலி'' - ட்ரோல் செய்யப்பட்ட புதுமண தம்பதி வேதனை

post image

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரிஷப் ராஜ்புத் என்பவர் சோனாலி சௌக்சே என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான சில வாரங்களிலேயே வைரலானது.

பலரும் ரிஷப்பின் கருமையான தோல் நிறத்தைக் குறிப்பிட்டு கேலி செய்தும், சோனாலி பணத்திற்காகவும் தான் ரிஷப்பைத் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்த விமர்சனங்கள் குறித்து பிபிசி ஊடகத்திற்குப் பேட்டியளித்த இந்தத் தம்பதி, தங்களின் வேதனையையும் விளக்கத்தையும் பகிர்ந்துள்ளனர்.

Indian couple trolled over skin colour

"நாங்கள் 2014ஆம் ஆண்டு கல்லூரியில் ஒன்றாக படித்தபோது சந்தித்தோம். இது வெறும் 30 வினாடி வீடியோவைப் பார்த்து உருவான பந்தம் அல்ல, 11 ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய காதல் உறவு. தங்கள் திருமணத் தருணம் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

சமூக வலைதளங்களில் என் குடும்பத்தையும் சேர்த்துத் தாக்கிப் பேசியது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. யாருக்கும் இன்னொருவரின் குடும்பத்தைக் காயப்படுத்த உரிமையில்லை" என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார்.

விமர்சனங்களுக்குப் பதிலளித்த சோனாலி, "என்னை 'கோல்ட் டிக்கர்' என்று அழைப்பதும், என் கணவரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவதும் எனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் பலருக்கும் வெவ்வேறு தோல் நிறங்கள் உள்ளன.

ஆனால் இன்னும் வெள்ளையாக இருப்பதுதான் சிறந்தது என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. ஒருவரை அவரின் நிறத்தை வைத்து மட்டும் நல்லவர், கெட்டவர் என்று மதிப்பிடுவது நியாயமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.​ இந்த தம்பதியின் புகைப்படங்கள் கடந்த ஒரு வாரமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

Europe: விந்தணு தானம் செய்தவருக்கு கேன்சர் மரபணு; 197 குழந்தைகளின் நிலை என்ன?

உலகம் முழுக்க குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருவதால், அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகளும் முன்னேறிக்கொண்டே வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் விந்தணு தானம். வெளிநாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வரும் இந... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ரகசிய திருமணம்; பிரிட்டன் குடும்பத்தோடு தொடர்புடைய பூஜா தியோல் யார்?

சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல், இடையிலே பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் சமீபகாலமாக அதிகமான படங்களில் நடித்து வருகிறார். சன்னி தியோல் 1983ஆம் ஆண்டு பாலிவுட்... மேலும் பார்க்க

'தி காட்பாதர்' முதல் 'பாட்ஷா' வரை! - இந்தாண்டு சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள படங்கள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா நாளை முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்திய மொழி திரைப்படங்கள் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களும் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளன. அத்தோடு இந்த... மேலும் பார்க்க

திருமணமானவருடன் 13ஆண்டுகள் உறவு: `மோசடி அல்ல' -பெண் தொடர்ந்த வழக்கில் ஆண் நண்பரை விடுவித்த கோர்ட்

பெண்கள் சில நேரங்களில் பணி செய்யும் இடங்களில் திருமணமான ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வார்கள். சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு திருமணமாகிவிட்டது என்று தெரிந்தே அவர்கள் அவர்களுடன் உறவில் இருப்பார்கள். அந்த ஆண்கள... மேலும் பார்க்க

பாலி தீவில் ஆபாச வீடியோ எடுத்து விநியோகம்? `ஒன்லிஃபேன்ஸ்' பிரபலம் பானி ப்ளூ கைது - யார் இவர்?

இந்தோனேசியாவின் பாலி தீவில் ஆபாசக் காணொளிகளை தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல 'ஒன்லிஃபேன்ஸ்' நட்சத்திரம் பாணி ப்ளூ கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் பாலியில் இந்த ... மேலும் பார்க்க

வேலை வாங்கி தருவதாக கூறி திருமணம்; சொன்ன சொல்லை காப்பாற்றாத கணவன் - கபடி வீராங்கனை விபரீத முடிவு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் கிரன் சூரஜ்(29). இப்பெண் தேசிய அளவிலான கபடி வீராங்கனையாவார். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் நிதி நெருக்கடியில் கஷ்டப்பட்டார். இதனை தெரிந்து கொண்ட ஸ்... மேலும் பார்க்க