செய்திகள் :

கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன?

post image

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மாநகராட்சிக் கூட்டம்
மாநகராட்சிக் கூட்டம்

இதுசம்பந்தமாகப் பேசிய துணை மேயர் மகேஸ் குமார், "மாநகராட்சியின் திட்டங்களை நிறைவேற்ற போதுமான அளவு நிதியை தமிழக அரசு விடுவிக்கவில்லை. கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை அளிக்கவில்லை. வேளச்சேரி மேம்பாலம் உட்பட முக்கியமான திட்டங்களை அரசு முடக்கியிருக்கிறது. ஒப்பந்தத்தாரர்கள் அவர்கள் செய்த பணிகளுக்கான பில் க்ளியர் ஆகவில்லை எனக் கூறி விளம்பரம் கொடுத்திருக்கின்றனர்.

அம்மா உணவகம் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் பெருமிதமாகப் பேசுகின்றனர். சென்னையில் அம்மா உணவம் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் அம்மா உணவகத்துக்காகச் செலவளிக்கிறோம்.

காலை உணவுத்திட்டம் தனியார் நிதி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது. அந்தப் பள்ளிகளுக்கு உணவு எடுத்து செல்வதற்கான வாகன செலவைக் கூட மாநகராட்சிதான் ஏற்றிருக்கிறது. அதற்காகவாது நிதியை விடுவிக்க வேண்டும். நிதி விடுவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருக்கிறோம்.

துணை மேயர் மகேஸ் குமார்
துணை மேயர் மகேஸ் குமார்

நிதி நெருக்கடியில் இருக்கிறோம் எனக் கூறி 21,000 கோடி கடன் வாங்கி தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றுகிறது. எம்.எல்.ஏக்களுக்கு கார் கொடுக்கிறோம் என்றெல்லாம் அறிவிக்கிறார்கள். அதேமாதிரி, மாநகராட்சிக்கும் முதல்வரிடம் கூறி சிறப்பு நிதியை விடுவிக்க வேண்டும். மேயர் பிரியா இதுசம்பந்தமாக இரண்டு நாட்களுக்கு முன்பாக முதல்வருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். மாநகராட்சி ஆணையர் நகராட்சி நிர்வாகத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரிடம் பேசி நிதியைப் பெற்று வாருங்கள்" என்றார்.

‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா?

தற்போது அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர வரி விதித்துள்ளன. இந்த நிலையில், இந்தப் பிரச்னையை இன்னும் பெரிதாக்கும் விதமாக, ஒன்டாரியோ ஏரியை ‘அமெரி... மேலும் பார்க்க

"பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் சம்பத்குமார... மேலும் பார்க்க

"மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" - கர்நாடக முதல்வர்

கர்நாடகாவின் முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற பின், தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் மேகதாது அணைப் பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது. இந்த அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிலிருந்து வரும் தண்ண... மேலும் பார்க்க

'புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்?’ - பேரவையில் முதல்வர் ரங்கசாமி கொடுத்த விளக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரு... மேலும் பார்க்க

கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்... நிதி ஆயோக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, நம் இளைய தலைமுறை பற்றி உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு கசப்பான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ‘Reimagining Skills for Viksit Bharat @2047’ என்ற அந்த ... மேலும் பார்க்க

'பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?' - அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி!

அமைச்சர் வன்னி அரசுவின் சமூகநீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. விவாதத்தின் போது சில திமுக, அதிமுக உறுப்பினர்கள், 'நாங்கள் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத... மேலும் பார்க்க