ஜனநாயகன்: `இது ஒன்னும் புதுசு இல்லை.!' - விஜய் படங்களும் சந்தித்த சிக்கல்களும்!
காங்கிரஸ்: "அரசியல் சக்தியாக மாறிவிட்டார் விஜய்.!"- மீண்டும் பிரவீன் சக்ரவர்த்தி
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.
இதனிடையே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார். அதேபோல காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜன. 7) காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 60 வருஷமாக ஆட்சியில் இருந்தது இல்லை.
அதிக சீட், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு ஆகியவை காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. கூட்டணியை பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும்.

யார் வேண்டுமானாலும் கோரிக்கை வைக்கலாம். அதில் பிரச்னை இல்லை. ஆனால் இறுதி முடிவை தலைமை தான் எடுக்கும். விஜய்யை சந்தித்தேன். அவ்வளவு தான். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
அரசியல் சக்தியாக மாறிவிட்டார் விஜய். அதனை யாரும் மறுக்க முடியாது" என்று பேசியிருக்கிறார்.
ஒருபக்கம் அதிமுக - பாமக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸில் நிர்வாகிகள் இருவேறு நிலைப்பாட்டில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















