செய்திகள் :

குஜராத் : காந்தி நகர் சபர்மதி ஆற்றங்கரையோரம் 6 ஏக்கரில் புதிய நகரை உருவாக்கும் நடிகர் அமிதாப்பச்சன்!

post image

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் கடுமையான கடனில் சிக்கித்தவித்தார். ஆனால் இப்போது கடுமையாக உழைத்து கடனில் இருந்து மீண்டு பல்வேறு விதமான தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப்பச்சன் அதிக அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்.

தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் அதிக அளவு நிலம் வாங்கி இருக்கிறார். இது தவிர குஜராத் மற்றும் மும்பையில் வர்த்தக கட்டடங்களில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 23 ஆயிரம் சதுர மீட்டர், அதாவது 5.6 ஏக்கர் நிலம் வாங்கி போட்டு இருந்தார். அந்த நிலம் சமர்மதி ஆற்றங்கரையோரம் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தில் அமிதாப்பச்சன் முதலீடு செய்திருந்தார்.

அபிஷேக் பச்சனுடன் அமிதாப்

இப்போது அந்த நிலத்தில் குடியிருப்பு நகரம் ஒன்றை உருவாக்க அமிதாப்பச்சன் முடிவு செய்துள்ளார். இதற்காக ஸ்ரீலோடஸ் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்துடன் அமிதாப்பச்சன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கான ஒப்பந்தத்தில் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சன் ஸ்ரீலோடஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளார். இந்த இடத்தில் 10 லட்சம் சதுர அடியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், வணிக வளாகம், அலுவலக வளாகம் என அனைத்து வசதிகளுடன் இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட இருக்கிறது. சபர்மதி ஆற்றங்ரையோரம் இருக்கும் கிஃப்ட் சிட்டி வளாகத்தில் இது கட்டப்பட இருக்கிறது.

ஸ்ரீலோடஸ் டெவலப்பர்ஸ் நிறுவனம் முதல் முறையாக கிஃப்ட் சிட்டியில் இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த கட்டுமான நிறுவனம், மும்பையின் ஜூகு, பாந்த்ரா, பிரபாதேவி, வெர்சோவா, நீபியன் சீ ரோடு மற்றும் அந்தேரி போன்ற முக்கியப் பகுதிகளில், அதிநவீன ஆடம்பர குடியிருப்பு மற்றும் உயர்தர வணிக வளாகத் திட்டங்களை உருவாக்கி இருக்கிறது. அமிதாப்பச்சனும், ஸ்ரீலோடஸ் நிறுவனமும் லாபத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன.

மகாராஷ்டிரா: தங்கையைக் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி; போராடிக் காப்பாற்றிய 11 வயது சிறுவன்!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஷிராலே அருகில் இருக்கும் உப்வாலே என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சங்கராம் பாட்டீல். இவருக்கு சிவம் (11) மற்றும் ஸ்வர்வாஞ்சலி (9) ஆகிய இரண்டு குழந்தைகள் ... மேலும் பார்க்க

மும்பை: வெற்றி பெற்ற ஒரேமாதத்தில் அடியோடு பாஜக-வில் சேர்ந்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது படிப்படியாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க தனித... மேலும் பார்க்க

`135 கிலோவில் இருந்து 89 கிலோவாக குறைந்துவிட்டேன்' - அமைச்சர் நிதின் கட்கரி சொல்லும் ரகசியம்!

மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எப்போதும் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிதின... மேலும் பார்க்க

மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். தன் மனைவியின் உயிரைக் காக்கப் போர... மேலும் பார்க்க

10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!

ஹரியானாவில் ஒரு தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அங்குள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் உஷனா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(38). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின... மேலும் பார்க்க

Maduro: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் பக்தர்; இந்தியாவுடனான வெனிசுலா அதிபரின் ஆன்மிக தொடர்பு!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவர் மனைவி சிலியா புளோரஸ் தம்பதியை அமெரிக்க படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தி சிறைபிடித்துச் சென்றுள்ளன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க