செய்திகள் :

கோவை: அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - அதிர்ச்சி பின்னணி!

post image

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்துள்ளது. இதை அறியாமல் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மதிய உணவு

இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 43 மாணவ, மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 30 மாணவர்கள், 13 மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் உண்டாகியுள்ளது. இதனால் பெரும் பதற்றமானது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு மாணவ, மாணவிகளின் உடல்நலம் சீரானது. நேற்று இரவு அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதிய உணவு

இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டியதற்கு பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அளித்துள்ள விளக்கத்தில், "இது குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி இது போன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.  அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்” என்றார்.

பாதிக்கப்பட்ட மாணவர்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அளித்துள்ள விளக்கத்தில், “அரசு பள்ளிகளில் உள்ள சமையல் அறைகள் மற்றும் வளாகம் முழுவதும் சுத்தம் செய்வதற்கும், உணவு பொருட்களையும் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

தூத்துக்குடி துறைமுகம்: ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு இந்திய அளவில் சாதனை!

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்குகளைக் கையாளுவதில் ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு தேசிய சாதனையைப் படைத்துள்ளது. இதுகுறித்து பேசிய துறைமுக ஆண... மேலும் பார்க்க

`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' - அன்புமணி ராமதாஸ்

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார். தாம்பரத்தில் நேற்று (மார்ச்.10) பாமக சார்பில் மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ந... மேலும் பார்க்க

10ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் - அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை கடித்த வெறி நாய்!

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக இன்று காலை பள்ளிக்கு சென்றனர். தேர்வு தொடங்குவதற்கு முன்... மேலும் பார்க்க

அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' - உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய நாடுகள். இந்த விஷயங்களில் ஈரானை ஒப்பிட்டால், அதற்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். ஆனாலும், 12 நாள்களாகப்... மேலும் பார்க்க

'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?

திமுக கூட்டணியில் இன்னும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கும் திமுக தர விரும்பும் இடங்களுக்கும் ஒத்துப்போகாததால் இழுபறி நிலவுகிறது... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் தவெக? "EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால்" - பியூஸ் கோயலின் பதில் என்ன?

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று (மார்ச். 10) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், 'த... மேலும் பார்க்க