செய்திகள் :

கோவை: ``எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம்'' - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை

post image

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தனிநபர் தன் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்வது என்பது கடினம் என்ற சிந்தனைக்கு சொந்தக்காரன் நான்.

 சி.பி. ராதாகிருஷ்ணன்
சி.பி. ராதாகிருஷ்ணன்

சி.பி. ராதாகிருஷ்ணன் இன்றைக்கு கோவை காரமடை ஒன்னிபாளையம் கிராமம் கருப்பராயன் கோயில் விளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகளுடன் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு மீண்டும் இரண்டாவது முறையாக விஜயம் செய்திருக்கிறேன்.

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் உண்மையில் எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம். அதுவும் இந்த சம்பவம் நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது.

குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவதும் காவல்துறையினுடைய பொறுப்பு.

கோவை மாணவி பாலியல் வழக்கு
கோவை மாணவி பாலியல் வழக்கு

நிச்சயமாக காவல்துறையினர் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட சகோதரிக்கும், அவரது பெற்றோருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாதது தான்.  சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் நடந்து விடுகிறது. வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.” என்றார்.

30% மதிப்பு குறைந்தும் தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்தை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டாத மக்கள்! - இனி?

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிம், இப்போது பாகிஸ்தானில் தனது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளுடன் பதுங்கியிருக்கிற... மேலும் பார்க்க

US: நியூயார்க் மேயர் தேர்தல்; டிரம்பை எதிர்த்து அபார வெற்றி பெற்ற இளைஞர் `ஜோஹ்ரான் மம்தானி' யார்?

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.1969-ம் ஆண்டுக்குப் பிறகு, 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் மேயராகும் பெருமையை ஜோஹ்ரான் மம்தானி ப... மேலும் பார்க்க

``அய்யாவைச் சுற்றி திமுக கைக்கூலிகள், தீய சக்திகள்; நான் சேர மாட்டேன்!'' - உறுதியாகச் சொன்ன அன்புமணி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் நேற்று இரவு 100-வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அதைத்தொடர்ந்து பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொ... மேலும் பார்க்க

``துரோகம், சமூகநீதி, சுயமரியாதை பற்றி பேச திமுக, அதிமுக-வுக்கு அருகதையில்லை'' - சீமான் காட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நோக்கில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:கோவை சம்... மேலும் பார்க்க