செய்திகள் :

"சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கூட்டணி அமைச்சரவை!" - பாராட்டிய மாரி செல்வராஜ்

post image

தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்றைய தினம் 23 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தவெக ஆட்சியமைத்ததற்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டைத் தொடர்ந்து தற்போது தவெக அமைச்சரவையில் விசிக, ஐ.யு.எம்.எல் இடம்பெற்றிருக்கிறது.

திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அமைச்சர் வன்னி அரசு
அமைச்சர் வன்னி அரசு

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி அமைச்சரவையை அமைத்திருக்கும் முதல்வர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்து, அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்

விசிக-வை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா போட்ட பதிவிற்குப் பல்வேறு பக்கங்களிலிருந்தும் கண்டனங்கள் வலுத்தன.

இயக்குநர் மாரி செல்வராஜ், "சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரைவியில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும், பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள் பணிகள் சிறக்கட்டும்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

`எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கும் கனிமொழி மேடம்... ராசாவைக் கண்டிக்க வேண்டும்!' - ஆதவ் அர்ஜுனா

த.வெ.க அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக விசிக வன்னியரசும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஐ.யு.எம்.எல் ஷாஜகானும் இன்று நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அ.ராசாவின் பதிவு த.வெ.க அமைச்சரவையில் விச... மேலும் பார்க்க

'அமைச்சர்களுடன் ஒன்றரை மணி நேர சந்திப்பு; தலைமைச் செயலகம் வந்த அழகிரி மகள்!' - தவெக-வில் இணைகிறாரா?

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் திமுக தலைவர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க அழகிரியின் மகள் கயல்விழி, இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்து தவெகவின் முக்கியமான சில அமைச்சர்களை நேரில் சந்தித்திருக்கிறார்... மேலும் பார்க்க

``அதிமுக எங்களின் உயிர் மூச்சு; அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச்செயலாளர்" - எஸ்.பி.வேலுமணி பேச்சு

இரண்டாக பிளவுபட்டுள்ள அதிமுக-வில் எஸ்.பி.வேலுமணி அணியில் சிலருக்கு தமிழக வெற்றிக் கழகம் அமைச்சர் பதவியை வழங்கும் என்கிற பேச்சுகள் தொடர்ந்து அடிபட்டு வந்தன. அந்தப் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 8-ம் ஆண்டு நினைவுநாளில் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் துள்ளத் துடிக்க உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரிடம் இன்னமும் கண்ணீர் நிரம்பி வழிகிறது. 8-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி படுகொலை... மேலும் பார்க்க

8-ம் வகுப்பு முதல் ரசிகர்; விஜய்யைக் கவர்ந்த பேச்சு திறமை - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் பின்னணி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி, வெற்றி பெற்றவர் ரமேஷ். இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையிலும் இடம்பெற்ற... மேலும் பார்க்க

'திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை உண்மைதான்; தவெக ஆட்சியை.!'- விகடனுக்கு பெ.சண்முகம் பேட்டி

திமுக, அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது உண்மைதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விகடன் பேட்டியில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். விகடன் பேட்டியில் பேசிய... மேலும் பார்க்க