தமிழ்நாட்டில் அதிகரிக்கும் 'குழந்தைத் திருமணம்' - அப்போ, ஹெல்ப் லைன், கடுமையான ச...
'திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை உண்மைதான்; தவெக ஆட்சியை.!'- விகடனுக்கு பெ.சண்முகம் பேட்டி
திமுக, அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது உண்மைதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விகடன் பேட்டியில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
விகடன் பேட்டியில் பேசிய பெ.சண்முகம், " அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி இரண்டையும் மக்கள் புறகணித்திருக்கிறார்கள். இந்த இரண்டு அணிக்கும் எதிராகத்தான் தீர்பளித்திருக்கிறார்கள்.

தனிப்பெரும் கட்சியாக தவெக கூடுதல் இடங்களை வென்று ஆட்சியமைப்பதற்கு வாய்ப்புள்ளக் கட்சியாக அதுதான் இருந்தது. அதனால் தவெக ஆட்சி அமைக்கக்கூடாது, இதை தடுக்கும் நோக்கத்துடன் இத்தகைய முயற்சிகள் (திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள்) நடைபெற்றன என்பது உண்மைதான்.
இப்படியான யோசனைகள் முன்வைக்கப்பட்டன என்பதும் உண்மைதான். ஆனால் இது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரும், புதிருமாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

திடீரென்று இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஒட்டி ஒரு கட்சி ஆட்சி அமைப்பதையும், மற்றொரு கட்சி ஆதரவு அளிப்பதையும் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்பதால் இதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லிவிட்டோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
முழுமையானப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.













