செய்திகள் :

தொகுதி பங்கீடு: "மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம்" - கொதிக்கும் மாணிக்கம் தாகூர்

post image

மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணியில் கூடுதல் தொகுதி ஒதுக்கீடு, கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

 மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

மேலும், இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்தும் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கின்றன.

மோடி அரசு ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். பாராளுமன்றத்தில் யார் பலமாகச் சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிக்கொண்டுப் போய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்குக் கிடையவே கிடையாது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ்தான் என் உயிர். மரியாதை, அன்புதான் கேட்கிறோம்.

காங்கிரஸைச் சாதாரணமாக நினைத்துப் பேசுகின்றனர். மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம். எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான்" எனக் கூறியிருக்கிறார்.

"திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை" - பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன?

தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கூட்டணி குறித்து பரபரப்பான கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லாதத... மேலும் பார்க்க

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு விவகாரம்: "இப்ப என்ன அவசரம்?" - மூத்த தலைவர் புஜ்பால் கேள்வி

மகாராஷ்டிராவில் சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சி 2023 ஆம் ஆண்டு இரண்டாக உடைந்தது.சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களுடன் சென்று ஒட்டுமொத்த கட்சியையும் தன்வசப்படு... மேலும் பார்க்க

”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” - உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கோவி.செழியன்... மேலும் பார்க்க

உக்ரைன் - ரஷ்யா: "20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்க்களத்தில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க

கோவையில் செந்தில் பாலாஜியை முந்திய வேலுமணி; ஹாட் பாக்ஸுடன் இறங்கிய அதிமுக; வீடு தேடி வரும் பரிசுகள்

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிடினும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகதான் வென்றது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அத... மேலும் பார்க்க

Vijay: "அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுகவை ஆரம்பித்தார்" - விஜய் பற்றிய கேள்விக்கு உதயநிதி பதில்

கடந்த வாரம் விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதை நடத்திய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.அப்போ... மேலும் பார்க்க