செய்திகள் :

``நீ ஒரு தீவிரவாதி'' - சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது?

post image

ஐ.டி ஊழியர், அரசு அதிகாரி, ஓய்வுபெற்றவர் என எந்த வேறுபாடும், பிரிவுகளும் இல்லாமல் தொடர்ந்து ஆன்லைன் மோசடிகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் மோசடிக்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல.

நேற்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி சி.வி.சண்முகத்திற்கு 'டிஜிட்டல் அரஸ்ட்' போன்கால் வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடருக்காக தற்போது சி.வி.சண்முகம் டெல்லி இருக்கிறார்.

சைபர் கிரைம்
சைபர் கிரைம்

என்ன நடந்தது?

நேற்று காலை 10 மணியளவில், சி.வி.சண்முகத்திற்கு அவருக்கு தெரியாத போன் நம்பரில் இருந்து போன்கால் வந்துள்ளது.

எதிர்முனையில் ஆங்கிலத்தில் பேசிய மோசடி பேர்வழி, மும்பை போலீஸ் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.

சி.வி.சண்முகத்தை தீவிரவாதி என்றும், அவரை உடனடியாக கைது செய்ய உள்ளதாகவும் பயமுறுத்தி உள்ளனர்.

அடுத்ததாக, 'சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர்' பேசுவதாக ஒரு நபர் பேசியுள்ளார். அவர் சி.வி சண்முகத்திற்கு எதிராக 17 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த மோசடியாளர்களிடம், உண்மையான போலீசார் என்பதற்கான அடையாளத்தைக் கேட்டுள்ளார் சி.வி.சண்முகம். உடனே, அவர்கள் தமிழில் திட்டி, மிரட்டியுள்ளனர்.

இதன் பின், சி.வி.சண்முகத்தின் உதவியாளர் போன்கால் வந்த நம்பரை ட்ரூ காலரில் செக் செய்துள்ளார். அந்த நம்பர் ட்ரூ காலர் ஆப்பில், 'பி.கே.சி காவல் நிலையம், மும்பை' என்கிற பெயரில் பதிவாகி உள்ளது.

மீண்டும் அந்த மொபைல் எண்ணுக்கு அழைத்த போது, போன்கால் எடுக்கவில்லை.

சைபர் கிரைம் மோசடி
சைபர் கிரைம் மோசடி

கோரிக்கை

இந்த சம்பவத்தை சி.வி சண்முகம் நாடாளுமன்ற காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகாராக சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சி.வி.சண்முகம் கூறும்போது, `நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த மாதிரியான சம்பவம் நடக்கும்போது, சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்படலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Telangana: `இந்து கடவுள்களை அவமதித்தாரா ரேவந்த் ரெட்டி?' - நடந்தது என்ன? முழுத் தகவல்!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நேற்று கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் இறுதியில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக முதல்வர் ரேவந்த் ரெட்டி உரையாற்றி... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: ``SIR குறித்து பேசலாம், ஆனால் ஒரு நிபந்தனை!'' - விவாதத்தைப் பின்னுக்குத் தள்ளிய பாஜக

மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணி நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே இந்தப் பணிக்குக் கடுமையாக எதிர்ப்பு தெர... மேலும் பார்க்க

`டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன?

கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான யுத்தம் முடிவுக்கு வருகிறது போலும். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு இடையே அரசல் புரசலாக இருந்து வந்த முதலமைச்சர... மேலும் பார்க்க

"செங்கோட்டையனின் விஸ்வாசம்; அவர் அமைதியானவர் என்று நினைக்க வேண்டாம்" - டிடிவி தினகரன்

டிடிவி தினகரனின் அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்த... மேலும் பார்க்க