புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ - தொழிற்சங்கங்கள...
'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' - வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? - மத்திய அரசின் நெறிமுறைகள்!
வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது.
இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
> 'மதச்சார்ப்பற்ற தேசம்' என்று முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக்காலத்தில் தவிர்க்கப்பட்ட 4 சரணங்களையும் இனி சேர்த்து பாட வேண்டும்.
அதாவது வந்தே மாதரத்தில் உள்ள 6 சரணங்களும் அப்படியே பாடப்பட வேண்டும்.
> எங்குத் தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் ஒன்றாகப் பாடப்பட்டாலும், தேசிய கீதத்திற்கு முன்பு, வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்.

> வந்தே மாதரத்தை 3 நிமிடங்கள் 10 நொடிகளுக்குள் பாட வேண்டும்.
> எங்குத் தேசிய பாடல் பாடப்பட்டாலும்... ஒலிக்கப்பட்டாலும், அட்டென்ஷனில் நிற்க வேண்டும். இதற்கு தியேட்டர்கள் மற்றும் செய்தி சேனல்கள் மட்டும் விதிவிலக்கு.
> ஜனாதிபதி கலந்துகொள்ளும் அனைத்து அரசு சார்ந்த மற்றும் முக்கிய நிகழ்வுகளில் வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும்.
> அனைத்து பள்ளிகளிலும் காலை பிரேயர்களில் இந்தப் பாடல் குழுவாக பாடப்பட வேண்டும்.
> அலுவல் சாராத நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும்போதும், இந்தப் பாடல் பாடப்படலாம்.
> தேசிய கொடி ஏற்றப்படும் அனைத்து கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் வந்தே மாதரம் பாட வேண்டும்.
> மாநிலம் சார்ந்த அரசு நிகழ்வுகளில் கவர்னர் கலந்துகொள்ளும் போது, வந்தே மாதரம் பாட வேண்டும்.
> ஆகாஷவாணி மற்றும் தூர்தர்ஷனில், ஜனாதிபதியின் பேச்சிற்கு முன் அல்லது பின், வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்.















