செய்திகள் :

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' - வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? - மத்திய அரசின் நெறிமுறைகள்!

post image

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது.

இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

> 'மதச்சார்ப்பற்ற தேசம்' என்று முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக்காலத்தில் தவிர்க்கப்பட்ட 4 சரணங்களையும் இனி சேர்த்து பாட வேண்டும்.

அதாவது வந்தே மாதரத்தில் உள்ள 6 சரணங்களும் அப்படியே பாடப்பட வேண்டும்.

> எங்குத் தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் ஒன்றாகப் பாடப்பட்டாலும், தேசிய கீதத்திற்கு முன்பு, வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்.

பங்கிம் சந்திர சாட்டர்ஜி
பங்கிம் சந்திர சாட்டர்ஜி

> வந்தே மாதரத்தை 3 நிமிடங்கள் 10 நொடிகளுக்குள் பாட வேண்டும்.

> எங்குத் தேசிய பாடல் பாடப்பட்டாலும்... ஒலிக்கப்பட்டாலும், அட்டென்ஷனில் நிற்க வேண்டும். இதற்கு தியேட்டர்கள் மற்றும் செய்தி சேனல்கள் மட்டும் விதிவிலக்கு.

> ஜனாதிபதி கலந்துகொள்ளும் அனைத்து அரசு சார்ந்த மற்றும் முக்கிய நிகழ்வுகளில் வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும்.

> அனைத்து பள்ளிகளிலும் காலை பிரேயர்களில் இந்தப் பாடல் குழுவாக பாடப்பட வேண்டும்.

> அலுவல் சாராத நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும்போதும், இந்தப் பாடல் பாடப்படலாம்.

> தேசிய கொடி ஏற்றப்படும் அனைத்து கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் வந்தே மாதரம் பாட வேண்டும்.

> மாநிலம் சார்ந்த அரசு நிகழ்வுகளில் கவர்னர் கலந்துகொள்ளும் போது, வந்தே மாதரம் பாட வேண்டும்.

> ஆகாஷவாணி மற்றும் தூர்தர்ஷனில், ஜனாதிபதியின் பேச்சிற்கு முன் அல்லது பின், வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்.

புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ - தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. ... மேலும் பார்க்க

`கூட்டணி ஆட்சியா ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்!' - ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பதிலடி

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார்.அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் பங்க... மேலும் பார்க்க

"தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்"- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே... மேலும் பார்க்க

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்.!' - காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின்

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் ப... மேலும் பார்க்க

அதிமுக: `எமெர்ஜென்சி ஆதரவு; பாஜக-வின் நட்பு; யாருக்குமில்லா அந்த துணிச்சல்!' | கூட்டணி சர்க்கஸ் 5

அதிமுககூட்டணி சர்க்கஸ் 5ஏறுகிற மேடையிலெல்லாம் 1967 மற்றும் 1977 இல் நிகழ்ந்ததைப் போன்ற மாற்றம் 2026 லும் ஏற்படும் என தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 1967 இல் திமுக... மேலும் பார்க்க

Naravane: பரபரப்பைக் கிளப்பும் 'Four Stars of Destiny'; நாரவனேயின் 'ஒற்றை' வாக்கிய பதில் என்ன?

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனேயின் புத்தகம் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'. இந்தப் புத்தகம்தான் கடந்த வாரத்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைப் பரபரப்பாக்கி வர... மேலும் பார்க்க