செய்திகள் :

'பஸ்ஸில் தவறான நோக்கத்துடன் தொட முயன்றார்' - இளம்பெண்ணின் வீடியோ; தற்கொலை செய்த நபர்

post image

கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் தீபக்(42). துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை செய்துவந்தார். இவர் வேலை செய்யும் நிறுவனம் சம்பந்தப்பட்ட பணிக்காக கடந்த வெள்ளிகிழமை கண்ணூர் சென்றார். பைய்யன்னூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்தில் பயணம் செய்தார்.

அப்போது, பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர் தீபக்கை வீடியோ எடுத்து, அவர் தவறான நோக்கத்துடன் தன்னை தொட முயன்றதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டார். அந்த இளம்பெண் வெளியிட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருந்தனர்.

வீடியோ வேகமாக பரவிய நிலையில், சனிக்கிழமை இரவு அறையில் தூங்குவதற்காக சென்ற தீபக் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அறைக்கதவை திறக்கவில்லை. இதை அடுத்து பெற்றோர் ஜோயி, கன்யகா ஆகியோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறையை திறந்து பார்த்தபோது, இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்தார் தீபக்.

இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மெடிக்கல் காலேஜ் காவல்நிலைய போலீஸார் அங்குசென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை
தற்கொலை

இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீபக் பயணம் செய்த பேருந்து ஒட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மைக்கு புறம்பாக இளம் பெண் வீடியோ வெளியிட்டதாக தீபக்கின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், வீடியோ வெளியிட்ட இளம் பெண் மீது போலீஸில் புகார் அளிக்க உள்ளதாகவும் தீபக்கின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. தீபக் அந்த நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக வேலை செய்துவருவதாகவும், அவர் மீது தவறான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை எனவும் அதன் உரிமையாளர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு எதிரான வீடியோ குறித்து தனது நண்பர்களிடம் வருத்தத்துடன் தீபக் பேசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே சமயம் இந்த சம்பவம் குறித்து வடகரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக இளம் பெண் வீடியோவில் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி ஒரு புகார் தங்களிடம் வரவில்லை என்று வடகரா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இளம் பெண் வெளியிட்ட வீடியோ காரணமாக தற்கொலை செய்துகொண்ட தீபக்

இதற்கிடையே வீடியோ வெளியிட்ட பெண் இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், `பைய்யனூரில் ரத்த தானம் செய்வதற்காக சென்றபோது, பைய்யனூரில் வைத்து இந்த சம்பவம் நடந்தது. மற்றொரு பெண்ணிடம் அவர் மோசமாக நடந்துகொண்டார். தன்னிடம் நெருங்கி வந்து, அதுபோன்று நடந்துகொள்ள முயன்றார். அதைத் தொடர்ந்தே வீடியோ எடுத்தேன்" என அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், 'என்ன சகோதரா உனது நோக்கம்' எனக் கேட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து நடந்து சென்றதாகவும் இளம் பெண் தெரிவித்துள்ளார். அதே சமயம் அவர் தற்கொலை செய்துகொண்டது துக்ககரமானது எனவும், அதை நான் எதிர்பார்க்கவில்லை எனவும் இளம் பெண் தெரிவித்துள்ளார்.

தற்கொலை தடுப்பு மையம்

குற்றாலத்தில் பதுங்கியிருந்த பிரபல சென்னை ரெளடி - துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தது எப்படி?

நெல்லை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏ பிளஸ், ஏ மற்றும் பி கிரேடு ரெளடிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் ரெளடிகளின் நகர்வு, அவர்களின் நடவடிக்கை குறித்தும் ரகசியமாக ... மேலும் பார்க்க

நெல்லை: செல்போனில் பேச்சு… கேட்காத அக்கா.. ஓட ஓட விரட்டிக் கொன்ற தம்பி; நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம், தேவர்குளத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவரது மனைவி சவுந்தரி. இவர்களுக்கு ராதிகா என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், சவுந்தரியும், கண்ணனும் வேலூரில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

Share Market: டெலிகிராமில் 'டீச்சர்' விரித்த மோசடி வலை; நெல்லை இளைஞர் ரூ.30 லட்சத்தை இழந்தது எப்படி?

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்குக் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்து நாட்டு எண் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து... மேலும் பார்க்க

UP: பணம் கேட்டு தொந்தரவு செய்த Live-in பார்ட்னர்; எரித்துக் கொன்று சாம்பலைக் கரைத்த நபருக்கு வலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வசிக்கும் ராம் சிங் என்பவர் தன்னுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்த பெண்ணைக் கொலை செய்துள்ளார். ரயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்ற ராம் சிங் மகன் நிதின், மினி வேன் ஒன்றில்... மேலும் பார்க்க

பரமக்குடி: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர்; கழிவறையில் செல்போனில் படம் பிடித்த எஸ்.எஸ்.ஐ கைது!

பரமக்குடியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இமானுவேல் சேகரனின் முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்... மேலும் பார்க்க

திருவள்ளூர்: கஞ்சா போதையால் நடந்த இரட்டைக் கொலை - சோகத்தில் முடிந்த பொங்கல் கொண்டாட்டம்

திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவரின் நண்பர்கள் கேசவமூர்த்தி, சுகுமார். இவர்கள் மூன்று பேரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் ... மேலும் பார்க்க