செய்திகள் :

மும்பை: பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது நடந்த கொடூரம்; பாதசாரிகள் மீது மோதி 4 பேர் பலி

post image

மும்பையில் பி.இ.எஸ்.டி. (பெஸ்ட்) நிர்வாகம் மின் விநியோகம் மற்றும் பயணிகள் பஸ் போக்குவரத்தை இயக்கி வருகிறது. நேற்று இரவு 10.05 மணியளவில் பெஸ்ட் பஸ் ஒன்று பயணிகள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

606 வழித்தட எண் கொண்ட அந்த ஏ.சி. பஸ் நேற்று இரவு பாண்டூப் ரயில் நிலையத்தில் யூ-டர்ன் எடுப்பதற்காகப் பின்னோக்கி வந்தது. அப்படிப் பின்னோக்கிச் சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள், பயணிகளை இடித்துத் தள்ளியது.

இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர். விபத்து குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்த 14 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தவிர பஸ் இடித்துத் தள்ளியதில் 4 பாதசாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ்சை ஓட்டிய டிரைவர் சந்தோஷ் சாவந்த் ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டு இருந்தார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மது அருந்தி இருந்தாரா என்பது குறித்து அவருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதோடு சரியான முறையில் பயிற்சி எடுத்துக்கொண்டாரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக பெஸ்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து
விபத்து

இறந்தவர்களில் மூன்று பேர் பெண்கள் ஆவர். அதில் மான்சி என்பவர் சயான் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வருகிறார்.

மற்றொருவரான பிரனிதா (31) நடிகை ஆவார். அவருடன் 9 வயது மகள் இருந்தார். அந்தப் பெண்ணும் விபத்தில் காயம் அடைந்துள்ளார்.

இது குறித்து மான்சியின் கணவர் கூறுகையில், ''தினமும் ரயிலில் இருந்து இறங்கி ரயில் நிலையத்திற்கு வெளியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் பிடித்து வீட்டிற்கு வருவது வழக்கம்'' என்று தெரிவித்தார்.

சம்பவம் மனித தவறால் நடந்ததா அல்லது தொழில்நுட்ப பிரச்னையால் நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே போன்று குர்லா ரயில் நிலையத்திற்கு வெளியில் பெஸ்ட் பஸ் பயணிகள் மீது மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இறந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணையில் பஸ்ஸை டிரைவர் பின்னோக்கி எடுத்தபோது நடத்துநர் பகவான் பஸ்ஸுக்குள் இருந்தது தெரிய வந்துள்ளது.

சிவகாசி: இடிந்து விழுந்த வீட்டின் கேட் சுவர்; விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நுழைவு வாயில் கேட் மற்றும் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொங்கல... மேலும் பார்க்க

சேலம்: லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து; டிரைவர் பலி

சேலம் மாநகரப் பகுதியில் இருந்து ஓமலூருக்கு பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென டீசல் இல்லாததால், மாமாங்கம் சாலையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தர்மபுரி நோக்கி நெய் எடுத்துக்க... மேலும் பார்க்க

திட்டக்குடி விபத்து: 9 பேரை காவு வாங்கிய அரசுப் பேருந்து - இமைக்கும் நொடியில் அரங்கேறிய அசம்பாவிதம்!

மரண ஓலங்களால் அதிர்ந்த எழுத்தூர்திருச்சியில் இருந்து 24.12.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து (SETC), திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

கர்நாடகா: பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 17 பேர் உயிரிழந்த சோகம்

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதியதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே தனியா... மேலும் பார்க்க

'நீர்தேக்கத் தொட்டியை இடித்தபோது, வீட்டில் இடிந்து விழுந்து விபத்து' - கரூர் அதிர்ச்சி சம்பவம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்தி கிராமம், அமர்ஜோதி மூன்றாவது தெருவில் அதிக கொள்ளளவு கொண்ட நீண்ட காலமாக பயனற்று கிடந்த நீர்த்தேக்கத் தொட்டியை நீக்கிவிட்டு, அங்கு அரசு சார்பாக புதிய கட்டடம் கட்ட... மேலும் பார்க்க

திமுக எம்.எல்.ஏ கார் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே விவசாயி பலியான சோகம்!

திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன். இவர் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு சென்று விட்டு மீண்டு தஞ்சாவூர் திரும்பினார். காரை டிரவைர் ஓட்டியு... மேலும் பார்க்க