செய்திகள் :

`ராகுல் காந்தி தளபதியின் கைப்பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார்' - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

post image

தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், 2029-ம் ஆண்டில் பிரதமர் வேட்பாளராக இருப்பார் எனக் தவெக தரப்பிலிருந்து அழுத்தமாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் - தவெக என இருகட்சிகளுக்கிடையே கருத்து மோதலும் ஏற்பட்டது.

இந்த நிலையில் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாடு அரசியலில் சமீப நாட்களாகத் தளபதி தான் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சு மிகவும் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டிலும் இதே போன்ற விவாதங்கள் எழுந்தபோது, 2026-ல் என்ன நடக்கும் என்று நான் கணித்து முதல்வராக தளபதிதான் வருவார் என்றேன்.

அதுதான் நடந்தது.

ராகுல் காந்தி, விஜய்
ராகுல் காந்தி, விஜய்

அதேபோல, வரும் 2029-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மிக முக்கிய மாற்றங்கள் நடக்கும். குறிப்பாக, நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை டெல்லி முடிவு செய்யப்போவது இல்லை. மாறாக, தமிழ்நாடுதான் அதை முடிவு செய்யப்போகிறது. 2029-ல் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை நாடு பார்க்கப்போகிறது. தற்போதைய சூழலில், ராகுலை ஏற்கவில்லையென்றால் காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறுவது குறித்த பேச்சுக்கள் எழுந்தாலும், 2029 தேர்தலுக்குப் பிறகுதான் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகத் தெரியும்.

தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் கைபிடித்து அமர வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2029-ம் ஆண்டிலும் அவரே தளபதியின் கரங்களைப் பிடித்து டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார். இதை ஆணித்தரமாக சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் அப்போது யார் முதல்வராக இருப்பர் என்பதை அப்போது பார்க்கலாம்." என்றார்.

Iran War: தாக்கிய அமெரிக்கா; `வருந்துவீர்கள்' - ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம் அதிகரிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல்கள் வெடித்துள்ளன, இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகம் மீண்டும் சூழ்ந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்... மேலும் பார்க்க

SCO மாநாடு: `உலகத் தலைவர்களை 'வெட்டி' நடுநாயகமாக பாக். பிரதமர்' - பிரதமர் மோடி வெளியிட்ட முழுப் படம்

கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26-வது உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. உலகத் தலைவர... மேலும் பார்க்க

US: இந்தியர்களின் Green Card கனவுக்கு பெரிய தடை? - 179 ஆண்டுகள் வரை காத்திருப்பா?

அமெரிக்காவில் வேலை அடிப்படையில் (Employment-based) கிரீன் கார்டு (Green Card) பெறக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு நீண்ட காலக் காத்திருப்பு ஏற்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போதைய... மேலும் பார்க்க

’தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்காது’ – எடப்பாடி பழனிசாமி ஆரூடம்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சினிமாவில் சட்டமன்ற காட்சி எப்படி இருக்குமோ... மேலும் பார்க்க

"இந்தத் தந்திரத்தில் நாங்கள் வீழ மாட்டோம்"- விஜய் உடனான சந்திப்பு குறித்து மாணிக்கம் தாகூர்

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக கூட்டணிக்குள் விவாதங்கள் எழுந்திருக்கிறது. தவெகவினர் முதல்வர் விஜய்தான் அடுத்த பிர... மேலும் பார்க்க

திடீர் விசிட்; கண்ணாடி வழங்கிய முதல்வர் விஜய்; இறுகப் பற்றி நெகிழ்ந்த மூதாட்டி! | Photo Album

Vijay: ```கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" - முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி மேலும் பார்க்க