செய்திகள் :

ராமநாதபுரம்: கணவன் இறந்த துக்கம்; மனைவி எடுத்த விபரீத முடிவு; தாயின் முடிவால் ரயிலில் பாய்ந்த மகன்

post image

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது ஆக்கிடாவலசை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு ஜானகி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ராஜாமணி கடந்த 3 மாதங்களுக்கு முன் சிறுநீரகம் பழுதடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் ராஜாமணியின் மனைவி ஜானகி கணவர் இறந்த துக்கத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலைக்குச் சென்றிருந்த இவரது இரு மகன்களும் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

தற்கொலை செய்துகொண்ட ஜானகி
தற்கொலை செய்துகொண்ட ஜானகி

இதையடுத்து பூட்டியிருந்த கதவைத் தட்டியும் வெகுநேரமாகத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டு கதவினை உடைத்து சென்று பார்த்தபோது வீட்டினுள் இவர்களின் தாயார் ஜானகி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இரு மகன்களும் தங்கள் தாயின் இறப்பைத் தாங்கிகொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளனர். உறவினர்கள் அவர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறி அடுத்த கட்ட பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தாயின் இறப்பினைத் தாங்கி கொள்ள முடியாத இரண்டாவது மகன் தினேஷ் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து கோவை சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட மகன் தினேஷ்
தாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட மகன் தினேஷ்

ரயிலில் சிக்கிய தினேஷின் உடல் ராமநாதபுரம் ரயில் நிலையம் வரை இழுத்து செல்லப்பட்டதால் சிதைந்து போனது. இதையடுத்து ரயில்வே போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஜானகியின் இறப்பு குறித்து உச்சிப்புளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையின் இறப்பினால் உயிரை மாய்த்துக்கொண்ட தாய். தாயின் இறப்பினால் தற்கொலை செய்துகொண்ட மகன் என அடுத்தடுத்து நடந்த துயரத்தில் ஆக்கிடாவலசை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

"பாஜக-வின் டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா" - ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

நாட்டையே உலுக்கிய 2012-ம் ஆண்டு நிர்பயா சம்பவத்தின் வடு மறைவதற்குள், நாட்டின் தலைநகரான டெல்லியில் மீண்டும் ஒரு இளம்பெண் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி... மேலும் பார்க்க

`ரூ.2.47 கோடி கட்டுங்க; 7 நாள்கள்தான் கெடு’ - ஏழை விவசாயி பெயரில் ஜிஎஸ்டி மோசடி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள வீரிசெட்டிபல்லி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 32). விவசாயியான இவர், கறவை மாடு வளர்ப்பு மூலமாக கிடைக்கும் குறைவான பால் வருமானத்தை நம்பியே பிழைப... மேலும் பார்க்க

திருமணத்தை மீறிய உறவு; கணவருடன் தனிமையில் இருந்த பெண்ணை கொலை செய்து புதைத்த மனைவி- நடந்தது என்ன?

தூத்துக்குடி, சங்கரப்பேரி ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர், காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் பிருந்தாதேவி. இவருக்கும் கிருஷ்ணகுமார் என்பவருக்கும்... மேலும் பார்க்க

ஸ்லீப்பர் பஸ்ஸுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட பெண் - டெல்லியில் பயங்கரம்

நாட்டின் தலைநகர் டெல்லியின் நங்லோய் பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் பேருந்துக்குள் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூ... மேலும் பார்க்க

கொலையில் முடிந்த மதுபோதை தகராறு, வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை! - என்ன நடந்தது?

சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான கோகுல். தன்னுடைய நண்பர்களான‌ மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜருகுமலை அடிவாரப் பகுதிக்குச் செ... மேலும் பார்க்க

நெல்லை: விஜய் முதல்வராவதில் ஏற்பட்ட இழுபறி; விரக்தியில் தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழந்த பரிதாபம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளைக் கைப்பற்றிய போதிலும், த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் இழு... மேலும் பார்க்க