செய்திகள் :

`விஜயகாந்தின் கொள்கைப்படி முடிவு இருக்கும் என நம்புகிறேன்..!'- தேமுதிக குறித்து ராஜேந்திர பாலாஜி

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் “விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்-லே சாட்சி” என்ற தலைப்பில், விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முன்னாள் முதல்வர் எடப்பாடி சந்திக்கச் சென்றாரா என செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும், கரூர் துயர சம்பவத்தையும் சம்பந்தப்படுத்தி பேசுவது  நகைப்பிற்குரியதாக உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது போராட்டத்தில் ஏற்பட்டது. கரூர் சம்பவம் அப்படியல்ல.  கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் விஜய்யைப் பார்க்க வந்து உயிரிழந்தவர்கள். தி.மு.க-விற்கும் த.வெ.க-விற்கும் போட்டி என செங்கோட்டையன் கூறுவது, பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டது என நினைப்பதுபோல் உள்ளது. யார் யாருக்குப் போட்டி என்பதும், ஒவ்வொரு கட்சிகளின் வண்டவாளம் தண்டவாளங்களெல்லாம் தேர்தலுக்குப் பின்னர்தான் தெரிய வரும்.

டி.டி.வி தினகரன், அ.தி.மு.க கூட்டணிக்கு வருகை தந்துள்ளதால் ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.க.வின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அ.தி.மு.க கூட்டணிக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது. தி.மு.கவை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்பதுதான் கேப்டன் விஜயகாந்தின் கொள்கையாக இருந்தது. அதை முன் வைத்து தே.மு.தி.க தலைமை முடிவெடுக்கும் என நம்புகிறேன்.

ராஜேந்திர பாலாஜி

எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்காக யார் வீட்டு வாசலையும் தட்டப் போவதில்லை. எங்கள் கூட்டணியை மேலும் மேலும் பலப்படுத்தவே கூட்டணிக் கட்சிகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.  அதற்காக அ.தி.மு.க-வினர் பலவீனமானவர்கள் அல்ல. யாரிடமும் மடிப்பிச்சை கேட்கும் அளவிற்கு அ.தி.மு.க பலவீனமாக இல்லை. இதை எங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி, பலவீனமானவர் அல்ல பலம் பொருந்திய தலைவர்.

தி.மு.க கட்சியை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு கொடுக்காது, அ.தி.மு.கவும் அதேபோல ஆட்சியில் பங்கு கொடுக்காது. சின்ன சின்ன கட்சிகளையெல்லாம் கூட்டு சேர்ப்பதால் தாங்கள் பெரிய பலமான கட்சி என கூட்டணி கட்சிகள் நினைத்துக்கொள்வது தவறான பிற்போக்கு. கூட்டணியில் சேரக்கூடிய கட்சிகள் எல்லாம் ஆட்சியில் பங்கு எனவும், எங்களால்தான் வெற்றி பெற்றார்கள் என சொல்வதெல்லாம் கேலிக்குரியது, விளையாட்டுக்குரியது.

பிரேமலதா

2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்குமான  தேர்தல்தான். யானை மீது அமர்ந்து செல்வபவர்கள் தாங்கள்தான் ராஜா என சொல்லிக்கொள்வார்கள், அதே யானை தும்பிக்கையால் அடித்து தள்ளினால் செல்லுமிடம் தெரியாமல் சென்று விடுவார்கள்.” என்றார்.

புதிய வியூகத்தைக் கையிலெடுக்கும் திமுக - திருப்போரூர் திட்டம் என்ன?

ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற வேகத்தில் அடுத்தடுத்த செயல்பாடுகளில் தீவிரம் காட்டிவருகிறது ஆளும் தரப்பான தி.மு.க. தேர்தலுக்கு முன்பான தேர்தல் பணிகளில் அந்தக் கட்சியின் வாக்குச்சாவடி முகவ... மேலும் பார்க்க

`ஜெயலலிதா விஜய்யைக் கைதுசெய்திருப்பார்; ஸ்டாலின் கரிசனம் காட்டியிருக்கிறார்!' - பி.டி.செல்வகுமார்

தூத்துக்குடியில் த.வெ.க தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி.செல்வகுமார் தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்... மேலும் பார்க்க

விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு - தவெக சொல்வதென்ன?

வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம்சேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பிரமாண்டமான வெ... மேலும் பார்க்க

'நாட் ரீச்சபிளில் இருப்பவர்கள் பற்றி கேட்காதீங்க' - விஜய் குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் இன்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள்... மேலும் பார்க்க

திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன?!

தமிழ் மன்னர்கள் தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியது, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் டி.ட... மேலும் பார்க்க

நாஞ்சிக்கோட்டை: பூட்டியே கிடக்கும் பொதுக் கழிவறை; அவதியுறும் மக்கள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியில் உள்ள கழிவறை பயன்பாடு இன்றி பூட்டியே கிடப்பதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஊர் மக்... மேலும் பார்க்க