செய்திகள் :

'விஜய் கூட்டத்துக்கு உற்சாகமாக வருகிறார்கள்; எதிர்காலத்திற்காக.!' - காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி

post image

கோவையில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அதிக சீட், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு ஆகிய 3  முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் எதிர்காலத்திற்காக வைக்கப்படும் கோரிக்கை. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த இது தேவையா, இல்லையா என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும். காங்கிரஸ் ஜனநாயக ரீதியான கட்சி. காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் கோரிக்கையை வைக்கலாம். கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை இறுதி முடிவு எடுக்கும். தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது உண்மை என ஏற்கனவே கூறிவிட்டேன். அவருடன் என்ன பேசினேன் என்பதை தற்போது சொல்ல முடியாது.

vijay

விஜய்யை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. 2 பேர் சந்தித்து பேசக் கூடாதா. நான் தனிப்பட்ட முறையில் விஜய்யை சந்தித்தேன். இப்படி டெல்லியில் பலரை சந்திக்கிறேன். தமிழகத்தில் தான் அதை கேள்வி கேட்கிறார்கள். விஜய்  கூட்டத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகிறார்கள். விஜய்யை மக்கள் நடிகராக பார்க்கவில்லை. ஒரு அரசியல்வாதியாக பார்ப்பதற்கு தான் வருகிறார்கள். அதை யாராலும் மறுக்க முடியாது. விஜய் ஒரு அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்” என்றார்.

"ஆட்சியில் பங்கு என விஜய் ஆஃபர் போட்டு காத்துக்கொண்டிருக்கிறார்" - திருமாவளவன்

திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தவெக கட்சி கூட்டணிக்காக அனைத்த... மேலும் பார்க்க

மும்பை: விலகும் விசுவாசிகள்: நெருக்கடியில் உத்தவ் வாரிசு; கோட்டையை தக்கவைப்பாரா ஆதித்ய தாக்கரே?!

மும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தல் தாக்கரே சகோதரர்களுக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் ராஜ் த... மேலும் பார்க்க

பாமக: `ஏன் அன்புமணியின் கூட்டணி பேச்சுவார்த்தை செல்லாது?' - ராமதாஸ் வழக்கறிஞர் விளக்கம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் அன்புமணியும் அறிவித்த கூட்டணி செல்லுமா என்பது குறித்து ராமதாஸின் வழக்கறிஞர் அருள் பேசியதாவது..."மருத்துவர் ஐயா (ராமதாஸ்) பா.ம.க-வின் தலைவராக இ... மேலும் பார்க்க

Vijay: "ஜன நாயகன் படத்திற்கு அமித் ஷா நெருக்கடி கொடுக்கிறாரா?" - செல்லூர் ராஜூ விளக்கம்

இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, "முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், பாஜக, தன் கட்டுப்பாட்டில... மேலும் பார்க்க

திற்பரப்பில் பீதியைக் கிளப்பும் முதலை; மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கும் எம்.எல்.ஏ!

இயற்கை எழில் சூழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. ஆண்டின் அனைத்து நாள்களிலும் தண்ணீர் கொட்டும் என்பதால் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சே... மேலும் பார்க்க

உங்கள் கனவைச் சொல்லுங்கள்: "மக்களின் கனவைக் கேட்டதற்கே ஏன் அலறுகிறார்?"- EPSஐ சாடும் அமைச்சர் ரகுபதி

தமிழக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், "அடிமைக் கனவோடு வாழும் பழனிசாமி 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்த... மேலும் பார்க்க