செய்திகள் :

வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: "சர்வதேச சட்டமீறல்" - ட்ரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

post image

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. எண்ணெய் மூலம் பெறும் லாபத்தை போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல், கடத்தல்களுக்கு வெனிசுலா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதனால் 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் படை வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், நேற்று அமெரிக்கப் படைகளால் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

நிக்கோலஸ் மதுரோ
நிக்கோலஸ் மதுரோ

நிக்கோலஸ் மதுரோ கை விலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கிறார்.

தற்போது நிகோலஸ் மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன.

நிகோலஸ் மதுரோவின் சிறைப்பிடிப்பிற்கு ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மேலும், இந்தத் தாக்குதல் கைது நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் இருந்தே கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ், ``நிகோலஸ் மதுரோ கைது நடவடிக்கையானது, போதை மற்றும் ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டதல்ல. எண்ணெய் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் ட்ரம்ப்தான் வலுவான தலைமை என்பதைக் காட்ட நடத்தப்பட்டது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நேரடியாகப் பேசினேன். இது இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான ஒருதலைப்பட்சத் தாக்குதல் போர் நடவடிக்கை. இந்தச் செயலுக்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்ய நான் அதிபரை அழைத்து அவரிடம் நேரடியாகப் பேசினேன்.

ஜோஹ்ரான் மம்தானி
ஜோஹ்ரான் மம்தானி

எனது எதிர்ப்பைப் பதிவு செய்தேன். அதைத் தெளிவாகத் தெரிவித்தேன். அரசு மாற்றத்திற்கான அப்பட்டமான முயற்சி இது. இந்த நடவடிக்கை மத்திய மற்றும் சர்வதேச சட்ட மீறலாகும். இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் உள்ளவர்களை மட்டும் பாதிக்கவில்லை, இது இந்த நகரத்தைத் தங்கள் வீடாகக் கருதும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டினர் உட்பட நியூயார்க் நகர மக்களையும் நேரடியாகப் பாதிக்கிறது.

அவர்களின் பாதுகாப்பிலும், ஒவ்வொரு நியூயார்க் நகரவாசியின் பாதுகாப்பிலும்தான் எனது கவனம் உள்ளது. எனது நிர்வாகம் இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்" - ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஒருபக்கம் கூட்டணி யாருடன் என்ற விவாதம் சூடுபறக்க... இன்னொருபக்கம் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற குரலும் வ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: `திமுக மற்றும் இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவை' - பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பேட்டி அளித்திருக்கிறார். திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ... மேலும் பார்க்க

TVK : சிக்கலில் ஜனநாயகன்; டெல்லிக்கு அழைக்கும் சிபிஐ - காங்கிரஸ் குரலுக்காக காத்திருக்கும் விஜய்?

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பனையூர் தவெக அலுவலகமும் பரபரப்பாகியிருக்கிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என பல முக்கிய மாற்றுக்கட்சிகளின் பிரதிநிதிகளை தவெகவில் இணை... மேலும் பார்க்க

மிரட்டி சாதிக்கும் ட்ரம்ப்; வெனிசுலா வழியில் கொலம்பியா, கியூபா? இந்தியாவுக்கும் சிக்கல்? Explained

இதுவரை 'வரி'யைக் காட்டி உலக நாடுகளைப் பயமுறுத்தி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது இன்னொரு அஸ்திரத்தைக் கையிலெடுத்துள்ளார். அது 'ராணுவ நடவடிக்கை வழி' ஆகும். மதுரோ கைது சம்பவம் கடந்த 3-ம் தேதி... வ... மேலும் பார்க்க

"மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து; திமுக-வைத் தவிர..." - செல்வப்பெருந்தகை

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை... மேலும் பார்க்க