திண்டிவனம்: பேருந்து நிலையத்துக்கு வைக்கப்பட்ட கலைஞர் பெயர் நீக்கம் - அதிரடி அரச...
ஸ்டாலின் வருகையால், தள்ளிப்போன விஜய்யின் வேலூர் விசிட்! - வேகம் காட்டும் தவெக நிர்வாகிகள்
வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அந்த தேதியில் நிகழ்ச்சியை நடத்த சில சிக்கல்கள் இருந்ததால் வேறு தேதியையும் தவெக-வினர் பரிசீலித்து வந்தனர்.
இதற்காக, வேலூர்-திருப்பத்தூர் மாவட்டங்களின் எல்லைகளைப் பிரிக்கும் அகரம்சேரியில் 25 ஏக்கரிலான பிரமாண்ட வெளிப்புற மைதானம் தேர்வுசெய்யப்பட்டு, அதைச் சீரமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஜய் வருகைக் குறித்தான தேதியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
வரும் 14-ம் தேதி சனிக்கிழமை, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் தி.மு.க வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடும் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். இதனிடையே, முதலமைச்சர் வருகைக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 13-ம் தேதியன்று விஜய்யின் நிகழ்ச்சிக்கு த.வெ.க நிர்வாகிகள் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு, காவல்துறைத் தரப்பில் இருந்து திட்டவட்டமாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
எனவே தான், ஸ்டாலின் வந்துசென்ற பிறகு மூன்றாவது வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் அல்லது பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில், வேகம் காட்டுகிறார்கள் த.வெ.க நிர்வாகிகள்.













