செய்திகள் :

அஜித் பவார்: இளம் பெண் பைலட் சாம்பவி பதக் டு கேப்டன் சுமித் கபூர்! - விமானிகளின் விவரம்!

post image

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவர் பயணம் செய்த விமானத்தில் அஜித் பவாரையும் சேர்த்து மொத்தம் 6 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். விமானத்தை கேப்டன் சுமித் கபூர், உதவி கேப்டன் சாம்பவி பதக் ஆகியோர்தான் இயக்கி இருக்கின்றனர்.

இது தவிர சாஹில் மதன் என்ற பைலட்டும் விமானத்தில் இருந்துள்ளார். கேப்டன் சுமித் கபூர்தான் விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டியிருக்கிறார். மூத்த பைலட் என்ற முறையில் விமானத்தை தரையிறக்குவது, விமானத்தை மேலே கிளப்புவது போன்ற முக்கிய முடிவுகளை எடுப்பார்.

அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த பைலட் என்று விமான போக்குவரத்து ஆணையமும், விபத்துக்குள்ளான விமான நிறுவனமும் தெரிவித்துள்ளன. அவர் 16 ஆயிரம் மணி நேரம் விமானத்தை இயக்கி இருக்கிறார்.

சாம்பவி பதக் இணை பைலட்டாகவும், விமானத்தின் முதல் நிலை அதிகாரியாகவும் செயல்பட்டார்.

இவரது பிரதான பணி விமானத்தின் உபகரணங்களை கண்காணிப்பது, விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது மற்றும் விமானத்தை தரையிறக்குவது உட்பட முக்கிய முடிவுகள் எடுப்பதில் பங்கெடுப்பார். மும்பை பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்துள்ளார் சாம்பவி பதக்.

அதோடு சாம்பவி பதக் நியூசிலாந்தில் நவீன முறையில் பைலட் பயிற்சி எடுத்து வந்துள்ளார். சிறிய ரக விமானங்களை இயக்கி சாம்பவி அதிக அனுபவம் உள்ளவர் ஆவார். இது தவிர சாஹில் மதன் என்ற ஒரு பைலட்டும் விமானத்தில் இருந்துள்ளார்.

விமான விபத்து குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் பாராமதி விமான நிலையம் டேபிள்டாப் போன்ற வடிவமைப்புடையது என்று கூறப்படுகிறது. ஓடுதளம் சிறியது ஆகும். எனவே முதல் முயற்சியில் விமானத்தை தரையிறக்க முடியாமல் இரண்டாவது முறை தரையிறக்க முயன்றபோதுதான் விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

விமானம் பாராமதியில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் வந்தபோது, சாம்பவி பதக் புனே விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். வெளிச்சம் 3000 மீட்டர் தூரத்திற்கு நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விமானம் தரையிறங்க அனுமதி கொடுத்துள்ளனர்.

ஆனால் விமானம் தரையிறங்க சென்றபோது போதிய வெளிச்சம் இல்லாமல் ஓடுதளம் தெரியவில்லை. இதையடுத்து விமானம் மீண்டும் மேல் நோக்கி பறந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு முறை ஓடுதளத்தில் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்த பிறகுதான் பைலட் விமானத்தை தரையிறக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அஜித் பவார் இறப்பை தொடர்ந்து மாநில அரசு மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இன்று மாலையே அஜித்பவாரின் இறுதிச்சடங்கு நடைபெறுவதால் தேவேந்திர பட்னாவிஸ் பாராமதிக்கு அவசரமாக புறப்பட்டு சென்றுள்ளார்.

அஜித்பவார் இடத்தை நிரப்பப்போவது யார்?

அஜித்பவாரின் திடீர் மரணம் பவார் குடும்பத்திலும், மராத்தா சமுதாயத்திலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மராத்தா சமுதாயத்தில் அஜித் பவார் முக்கிய தலைவராக இருந்தார். அதோடு கூட்டுறவு துறையிலும் மிகவும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். அஜித் பவார் மனைவி இப்போது எம்.பி.யாக இருந்தாலும் அவர் அஜித் பவார் இடத்தை நிரப்புவாரா என்பது கேள்விக்குறிதான். அஜித் பவாரின் மகன் பார்த் பவார் அரசியலில் இருக்கிறார். ஆனால் அவர் இன்னும் அரசியலில் தனக்கான இடத்தை பெறவில்லை. மற்றொரு மகன் ஜெய் பவார் குடும்ப தொழிலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனால் தேசியவாத காங்கிரஸ், மராத்தா சமுதாயத்தில் அஜித் பவாரின் இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Dubai: வரலாற்றில் முதல்முறையாக `தங்கத் தெரு' - துபாயில் உருவாகும் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் தெரியுமா?

ஆடம்பரம், தங்கம் என்றாலே சட்டென நினைவுக்கு வரும் நாடுகளில் குறிப்பிடதக்கது துபாய். தற்போது துபாயில் வரலாற்று சாதனை நிகழ்வாக 'துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்' திட்டத்தை இத்ரா துபாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமா... மேலும் பார்க்க

பனிப்பொழிவில் சிக்கி இறந்த எஜமானர்; 4 நாள்களாக உடலைப் பாதுகாத்த வளர்ப்பு நாய்; இமாச்சலில் நெகிழ்ச்சி

இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. பனிப்பொழிவு நடைபெறும் இடத்தில் யாராவது தனியாகச் சென்று சிக்கிக்கொண்டால் பனிக்கட்டியில் சிக்கி உயிர் பிழைப்பது கஷ்டம்.அங்குள்ள சம்ப... மேலும் பார்க்க

Republic day: மின்னொளியில் மிளிரும் புதுச்சேரி அரசு கட்டிடங்கள்!

மின்னொளியில் மிளிரும் புதுச்சேரி அரசு கட்டிடங்கள்சட்டப்பேரவை கட்டிடம்பழைய கலங்கரை விளக்கம்பிரெஞ்சு போர் நினைவிடம்சட்டப்பேரவை கட்டிடம்மத்திய கலால் துறைபுதுச்சேரி நகராட்சி கட்டிடம் புதுச்சேரி அரசு சின்ன... மேலும் பார்க்க

சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ்!

சென்னையைச் சேர்ந்த 48 வயதான தூய்மைப்பணியாளர் எஸ். பத்மா பணியின் போது கண்டெடுத்த ₹ 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருப்பி அளித்து பரவலான பாராட்டைப் பெற்றுள்ளார்.ஜனவரி 11ஆம் தேதி வண்டிக்காரன் சாலைய... மேலும் பார்க்க

சிம்ரன் பாலா: குடியரசு தின அணிவகுப்பில் வரலாற்று சாதனை படைக்கும் ஜம்மு காஷ்மீர் பெண் அதிகாரி

புதுடெல்லியில் நடைபெறவுள்ள நாட்டின் 77-வது குடியரசு தின அணிவகுப்பில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளார். மத்திய போலீஸ் படையின் (CRPF) உதவித் தளபதிய... மேலும் பார்க்க

டெல்லி: அரசு விருந்தினர் மாளிகை கட்டியதில் ஊழல் - மகாராஷ்டிரா அமைச்சர் உட்பட 46 பேர் விடுவிப்பு

2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, டெல்லியில் `மகாராஷ்டிரா சதன்' கட்டுவதற்கு டெண்டர் விடாமல் சமன்கர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டது.... மேலும் பார்க்க