பீகார் தேர்தல்: "ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு ரூ.30,000 கொடுப்போம்" - தேஜஸ்வி யாத...
`அதிமுகவிலும் குடும்ப அரசியல்' - செங்கோட்டையன் பரபரப்பு தகவல்
அதிமுகவில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மன நிலையில் உள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இணைந்துள்ளார்.
எடப்பாடிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அவரை முதலில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள்.
தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இருந்தே நீக்கினார்கள். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

“புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் நிலவவில்லை. திமுகவை போல அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது.
எடப்பாடியின் மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களும் வருகிறார்கள். இது நாடே அறிந்த உண்மை. இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து நான் பணிகளை செய்து வருகிறேன்.

தன்னால் முடியாத ஒன்றை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது.” என்றார்.
















