செய்திகள் :

சாத்தூர்: 'தனியார் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்' - கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எதிர்க்கோட்டை, எட்டகாப்பட்டி ஊராட்சியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

"இப்பகுதியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல்குவாரியால் கிராமத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கல்குவாரிக்காக வெடி வைக்கும் போது கிராமத்தில் உள்ள வீடுகளில் பிரச்னை ஏற்படுகிறது.

இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறோம்.

இந்தக் கல்குவாரிக்கு எனத் தனியான பாதை ஏதும் இல்லாததால் கிராமத்தின் பொதுப் பாதையைப் பயன்படுத்தி அதையும் சேதப்படுத்துகிறார்கள்" என இக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மனு அளித்த கிராம மக்கள்
மனு அளித்த கிராம மக்கள்

கல்குவாரிக்கு கருத்து கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கிராமத்திற்கே சம்பந்தமில்லாத வேறு ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கல்குவாரி வேண்டுமெனக் கோரிக்கை வைக்க வைத்தார்கள். அதனால் கிராம மக்களுக்கும், அவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது.

அதேபோல் கிராம சபை கூட்டத்திலும் கல்குவாரிக்கு எதிராக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இக்குறைதீர் கூட்டத்தில் தனியார் கல்குவாரிக்கு வழங்க இருக்கும் உரிமத்தை ரத்து செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தென்காசி: "நான் பாட்டு கேட்கும் ரேடியோவை திருடிட்டாங்க" - ஆட்சியரிடம் 95 வயதான மூதாட்டி புகார்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி.இவர் தனிமையில் வசித்து வருவதால் பொழுதை போக்குகின்ற வகையில் ரூபாய் 700 கொடுத்து ரேடியோ ஒன்று வாங்கி அதன்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `பாஸ்கு மைதானம்னு பேரை மாத்திட்டு அன்னதானம் நடத்துங்க' - போராட்டம் நடத்திய மக்கள்

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதி நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும் 10... மேலும் பார்க்க

"திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது" -அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு பணி நியமனங்கள் ந... மேலும் பார்க்க

"விசாரணைக் குழு விசாரிக்க வரவில்லை" - தவெக சி.டி.ஆர். நிர்மல்குமார் பேட்டி!

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த ... மேலும் பார்க்க

``இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக, நம் முதல்வர் தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்’’ - உதயநிதி

ராணிப்பேட்டையில், இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். காணொளிக்காட்சி வாயிலாக புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காமராஜர் தங்கி இருந்த நினைவகம் சீரமைப்பு - திறந்து வைத்து பெருமிதப்பட்ட உதயநிதி!

ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ராணிப்பேட்டைக்கு வந்திருந்தார். ... மேலும் பார்க்க