செய்திகள் :

"அந்த அனுபவத்திற்குப் பிறகு, துல்கர் சல்மானுடன் மீண்டும் பணியாற்ற முடியாது.!" - ஐஸ்வர்யா லட்சுமி

post image

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த 'King of Kotha' படத்தின் அனுபவம் மற்றும் ட்ரோலிங் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

‘King of Kotha’ படம் வெளியாகுவதற்கு முன்பு அந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தப் படம் வெளியான பிறகு என்னுடைய சினிமா பயணமே பாதிக்கப்பட்டது.

இப்போது நான் சொல்வது தவறாகக்கூட இருக்கலாம். அந்தப் படத்துக்குப் பின் எனக்கு பட வாய்ப்பு கொடுக்கூட பலரும் பயந்தார்கள்.

‘King of Kotha’
‘King of Kotha’

அந்த அளவுக்கு ’King of Kotha’ படம் ட்ரோல் செய்யப்பட்டது. பொழுதுபோக்கிற்காக பலரும் அந்தப் படத்தைக் கிண்டல் செய்தனர். அதன் பாதிப்பு எனக்கு மட்டுமல்ல, துல்கர் சல்மானும் கூட ட்ரோல் செய்யப்பட்டார்.

குறிப்பாக, படத்தில் நான் துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தை ‘ராஜு யேட்டா’ என்று அழைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டது.

அந்தப் படத்தில் எனக்கு அதிகப்படியாக இருந்த வசனம் ‘ராஜு யேட்டா’தான். இதன் பாதிப்பு நான் அடுத்து நடித்த ‘Hello Mummy’ படப்பிடிப்பின்போதுகூட தொடர்ந்தது.

அந்தப் படத்தின் உதவி இயக்குநர் ஒருவர், ‘ராஜு யேட்டா’ என்ற பெயரைவைத்து என்னை கிண்டல் செய்தார், அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்ததது.

இந்தப் பாதிப்பின் காரணமாக, துல்கருடன் இணைந்து ஓணத்துக்காக ஒரு விளம்பரப் படத்தில் என்னை நடிக்க கேட்டபோது, நான் மறுத்துவிட்டேன்.

ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி

‘கிண்டல்கள் தீவிரமாக இருக்கிறது, இப்போது நாங்கள் மீண்டும் இணைந்து நடிப்பது சரியாக இருக்காது’ எனக் கூறினேன். இந்த அனுபவத்திற்குப் பிறகு, இனி துல்கர் சல்மானுடன் என்னால் மீண்டும் பணியாற்ற முடியுமா? என்றுகூட தெரியவில்லை.

எங்களுடையது பொதுமக்கள் முன்னிலையில் இருக்கக்கூடிய ஒரு துறை. இதில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் மிக முக்கியம்.உங்களது கடைசிப் படத்தின் வெற்றியோ, தோல்வியோதான் இங்கு முக்கியம்" என்று பேசியிருக்கிறார்.

Mammootty 75: "எங்களுக்குள் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை!" - மம்மூட்டியை வாழ்த்தும் மோகன்லால்

நடிகர் மம்மூட்டிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அதையொட்டி நடிகர் மோகன்லால், மம்மூட்டியை வாழ்த்தித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அத்தோடு, மலையாள ஊடகத்தின் வாயிலாக மம்மூட்டிக்கு பிற... மேலும் பார்க்க

Mammootty: "சினிமாவில் 10 ஆண்டுகால இடைவெளி ஏன்?" - அடூர் கோபாலகிருஷ்ணன் பதில்

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியை வைத்து ‘பாதயாத்ரா’ படத்தை இயக்கியிருக்கிறார். 2016-இல் வெளியான ‘பின்னையும்’ திரைப்படத்திற்குப் பிறகு இ... மேலும் பார்க்க

Mohanlal: "நான் மோகன்லாலை திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டில் சொன்னப்போ..." - சுசித்ரா மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா, சமீபத்தில் மலையாளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோகன்லாலுடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், தங்களுடைய திருமணம் குறித்து தனது தந்தை கொடுத்த எச்சரிக்கை குறித்தும் பகி... மேலும் பார்க்க

Premalu: "யாராலும் அப்படியே ரீமேக் செய்யவே முடியாது!"- 'பிரேமலு' இந்தி ரீமேக் பற்றி இயக்குநர் கிரிஷ்

மலையாளத்தில் ஹிட் அடித்த 'பிரேமலு' திரைப்படம், தற்போது 'பிரேம் கீட்டனு' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. Bethlehem Kudumba Unit வீர் பஹாரியா நாயகனாக நடிக்கும் இந்தப் படம் அக்டோபர் ... மேலும் பார்க்க

Nivin Pauly: "நான் மிகவும் சலிப்படைந்துவிட்டேன்" - 'பென்ஸ்' படப்பிடிப்பு குறித்து நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் 'பெத்லகெம் குடும்ப யூனிட்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கிரிஷ் ஏ.டி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்.நிவின் ப... மேலும் பார்க்க

Mohanlal: "அது என்னுடைய தவறுதான்!'' - குழந்தைகள் குறித்து சுசித்ரா மோகன்லால்

மோகன்லாலைத் தொடர்ந்து அவர்களுடைய பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். விஸ்மயா மோகன்லால் நடித்திருந்த 'தொடக்கம்' திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந... மேலும் பார்க்க