செய்திகள் :

அன்று கட்சிக்குள் வெடித்த பூகம்பம்; டெல்லி நெருக்கம்! - உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனின் பின்னணி

post image

தமிழக வெற்றி கழகத்தின் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்று இருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கபட்டிருக்கிறது. குறிப்பாக மேலூர் பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பட்டியலின சமூகத்தை சேர்ந்த விஸ்வநாதனுக்கு உயர்கல்விதுறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யார் இந்த விஸ்வநாதன்?

காஞ்சிபுரத்தை பூர்விகமாக கொண்டவர். 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 87 சதவீத வருகைப்பதிவு, 38 விவாதங்கள் மற்றும் 658 கேள்விகள் என நாடாளுமன்றத்தில் விஸ்வநாதன் காட்டிய வேகம் காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என கேள்வி எழுந்த போது கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் விஸ்வநாதனின் பெயரை முன்மொழியவே, உடனே 'டிக்' அடித்திருக்கிறது டெல்லி தலைமை.

ராகுல் காந்தி - மேலூர் விஸ்வநாதன்
ராகுல் காந்தி - மேலூர் விஸ்வநாதன் -

ஆனால் மேலூர் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பமே வெடித்தது. பட்டியலின வேட்பாளர் எப்படி பொது தொகுதியில் வெற்றி பெற முடியும், அதுவும் அ.தி.மு.க கோட்டையில் தொகுதிக்கு அறிமுகமில்லாதவரை வெற்றி பெற வைக்க முடியாது என கட்சியினர் போர்கொடி தூக்கியதோடு வேட்புமனுதாக்கல் செய்ய கூடாது என விஸ்வநாதனுக்கும் அழுத்தமும் கொடுத்து வந்தனர்.

டெல்லி தலைமை பிரச்னையில் தலையிட்டு சரிகட்டவே ஓய்ந்தது உட்கட்சி சண்டை. தேர்தலின் போது விஸ்வநாதன் பிரச்சாரத்தில் காட்டிய வேகம் மக்களை கவர்ந்திருந்தது. முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு அடுத்த படியாக பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் மேலூர் தொகுதியில் போட்டியிடுவதால் அந்த சமூக மக்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கே விழுந்தன. கூட்டணி கட்சியினர் தி.மு.க-வினரும் பட்டியலினத்தவரல்லாத சமூகங்களிடம் பேசி ஓட்டுகளை காங்கிரஸ் பக்கம் திருப்பவே அ.தி.மு.க கோட்டையை உடைத்து வெற்றி கொடி நாட்டினார் விஸ்வநாதன்.

தவெக - காங்கிரஸ் நிர்வாகிகள்
தவெக - காங்கிரஸ் நிர்வாகிகள்

பொது தொகுதியில் வென்ற பட்டியலினத்தவர் என்பதால் தமிழகம் முழுவதும் பேசப்பட்டார் விஸ்வநாதன். த.வெ.க- வும் விஸ்வதானுக்கு அமைச்சர் பதவி கொடுக்க இருக்கிறது என தகவல்கள் வெளியானது. தற்போது உயர்கல்வி துறை அமைச்சராக விஸ்வநாதனை நியமித்திருக்கிறது தமிழக வெற்றிக் கழக அரசு.

கல்வி துறையில் பட்டியலின முகங்கள்

பட்டியலின சமூக மக்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுக்கபடுவதில்லை, அப்படி அமைச்சர் பதவி கொடுக்கபட்டாலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்புகளை தாண்டி முக்கிய கேபினேட் பொறுப்புகள் வழங்கபடுவதில்லை என்கிற விமர்சனங்கள் பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

விஜய் ராஜ் மோகன்
விஜய் ராஜ் மோகன்

தான் வெற்றி பெற்ற முதல் தேர்தலிலியே பள்ளிக்கல்வி, உயர் கல்வி துறை என இரண்டு அமைச்சர் பொறுப்புகளிலும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே கொடுத்து தாங்களும் சமூக நீதி அரசு தான் என சொல்லாமல், சொல்லியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

TVK Minister: மொபைல் கடை உரிமையாளர் டு போக்குவரத்துத்துறை அமைச்சர்! - யார் இந்த தமிழன் பார்த்திபன்?

சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய விஜய் தமிழன் பார்த்திபன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில்... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு 2026-ம் ஆண்டில் ரூ.100-க்கு சரியாது, ஆனால், எது வரை போகும்?

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது தினச் செய்தியாக மாறி வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.96-க்கு கீழ் இறங்கியுள்ளது. இவ்வளவு வேகமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து... மேலும் பார்க்க

கடன் பெற்றவர்களுக்கு 'மரியாதை': கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகளுக்கு RBI வழிகாட்டுதல்கள்! | 15 Points

கடன் வாங்கியவர்களுக்கும், கடன் வாங்க உள்ளவர்களுக்கு உள்ள பெரும் பயமே 'கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து திட்டிவிடுவார்களோ' என்பது தான். இங்கே பலரால் சூழல்களால் தான் கடன் தவணையைக் கட்ட முடியாமல் போய்வ... மேலும் பார்க்க

தேனி: அரசு மருத்துவமனை வார்டுகளில் சுற்றித் திரியும் எலிகள்; நோயாளிகள் அச்சம்!

தேனி மாவட்டம், கானா விலக்கில், அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கேரளம் மாநிலத்தில் இருந்தும் நாள்தோறும்... மேலும் பார்க்க

தவெக அமைச்சரவையில் இடம்பெறும் திருமாவளவன்? திருச்சி கிழக்கில் இடைத் தேர்தலில் போட்டியா?

த.வெ.க அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்புவிடுத்த நிலையில், வி.சி.க சார்பில் அதன் தலைவர் திருமாவளவனே அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்கிறார்கள... மேலும் பார்க்க

ஆந்திரா: `நீண்டகாலத் திட்டமிடல் இல்லாமல் வெறுமனே...' - விவாதத்துக்குள்ளாகும் அரசின் திட்டம்!

மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால், பெரும் சிக்கலுக்கு உள்ளாகின. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த த... மேலும் பார்க்க