செய்திகள் :

"அமலாக்கத்துறை சோதனை ராகுல் காந்திக்கு பெரிய மனநிறைவை தரும்" - ஆவேசமான பினராயி விஜயன்!

post image

திருவனந்தபுரத்தில் ​தனது வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பினராயி விஜயன் வீட்டுக்கு வெளியே வந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார். பினராயி விஜயன் பேசுகையில், ​"அனைவருக்கும் தெரிந்தபடி, இன்று காலை 7 மணிக்குத்தான் இந்த வீட்டு வாசலுக்கு அமலாக்கத் துறையினர் வந்தனர். சோதனைக்கு வந்த குழுவினர் தங்களுக்குக் கிடைத்த உத்தரவின்படிதானே வர முடியும் அதிகாரிகள் என்று வரும்போது, தங்களுக்கு மேல் உள்ளவர்கள் சொல்வதைக் கேட்க அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். ​வீட்டில் நுழைந்து சோதனை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை விரும்பத் தொடங்கி நீண்ட காலம் ஆகிறது. இந்தச் சோதனை சிலருக்குப் பெரிய மனநிறைவைத் தரும் என்று தோன்றுகிறது. குறிப்பாக ராகுல் காந்திக்கு மனநிறைவை தரும். ஏனெனில், 'ஏன் பினராயி விஜயன் வீட்டில் சோதனை நடத்தவில்லை, ஏன் பினராயி விஜயனை கைது செய்யவில்லை?' என ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தார்.

அமலாக்கத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.எம் தொண்டர்கள்

எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகளை பா.ஜ.க தொடர்ந்து வருகிறது. அதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் வலுவான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ​ஆனால், தங்களது கட்சியைச் சேராத மற்றவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையின் அத்துமீறல்கள் நடந்தால் நடக்கட்டும் என்ற சுயநல நிலைப்பாட்டையே காங்கிரஸ் எடுத்துள்ளது. எது எப்படியாக இருந்தாலும், இதோடு நாங்கள் முடிந்துபோகப் போவதில்லை. இதை ஒரு தொடக்கமாக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இதைக் கொண்டு எங்களைச் சோர்வடையச் செய்துவிடலாம் என்று யாரும் வீணாக நினைக்க வேண்டாம்.

தொண்டர்களிடம் ஆவேசமாக உரையாற்றிய பினராயி விஜயன்

நமது மண்ணின் உணர்வும், கட்சித் தோழர்களின் உணர்வும், எப்போதும் கட்சிக்கு இருக்கும் அளப்பரிய ஆதரவும்தான் இங்கே வெளிப்பட்டது. கட்சியின் எதிரிகள் எங்களைக் கொத்திக்குதற முயன்ற அனைத்துக் கட்டங்களிலும் இந்த ஆதரவுதான் எங்களுக்கு அரணாகக் கிடைத்துள்ளது. அந்த ஆதரவில் எந்தக் குறைவோ அல்லது சலனமோ இல்லை என்பதைத் தோழர்கள் இன்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர். அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எதையும் எதிர்கொள்வோம், இதுவே நமது பலம். ஒன்றாக நாம் களமிறங்குவோம்" என்றார்.

'பாட்டிலுக்கு 10 ரூபாய்...' - ஒரு டாஸ்மாக் ஊழியரின் லஞ்ச கதை!

`பாட்டிலுக்கு 10 ரூபாய்...' என தேர்தல் பிரசாரத்தின் போது கரூரில் விஜய் பாடியது பயங்கர வைரல். செந்தில் பாலாஜியை நோக்கி விஜய் பாடிய அந்த பாடலை 'செல்பி புள்ள' பாட்டுடன் மிக்ஸிங் செய்து ஆட்டம் போட்டு கொண்... மேலும் பார்க்க

ஓசூர், கோயம்புத்தூர், மதுரைக்கு மெட்ரோ - வேறு என்ன கோரிக்கை? நிர்மலா சீதாராமன் - விஜய் சந்திப்பு!

இந்திய பிரதமர் மோடியை சந்தித்த கையோடு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார்.இந்தச் சந்திப்பில் விஜய் வைத்த கோரிக்கை குறித்த அறிக்கை.."மாண்புமிகு... மேலும் பார்க்க

"மற்ற கட்சிகளுக்கு எதிராக ED ஊடுருவல் வேண்டும்; இதுவே காங்கிரஸ் நிலைப்பாடு" - பினராயி விஜயன்

கேரளா எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அதனையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழாக்கப் படுத்தி தனது எக்ஸ் தளத்தில... மேலும் பார்க்க

'உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நன்றிக்கடன் இதுவா?' - விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கும், ஆனைமங்கலம் செப்பேடுகள் மீண்டும் இந்தியா வந்தது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் நய... மேலும் பார்க்க

குப்பை மேலாண்மை: "கடந்த காலத்திலிருந்து பாடம் படிங்க" - தவெக MLA-வுக்கு பூவுலகின் நண்பர்கள் பதில்!

திருச்சி அரியமங்கலம் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, துவாக்குடி அருகே உள்ள சுமார் 1700 அடி ஆழமுள்ள பாறைப் பள்ளத்தில் குப்பைகளை கொட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தவெக திருவெறும்பூர்... மேலும் பார்க்க

`ஆளுநரே பல்கலைகக்கழகங்களின் வேந்தரா? 'பாஜக-வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சி' - பொன்முடி சாடல்

தமிழ்நாட்டின் தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று, "முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாடு முந்தைய அரசினுடையது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்... மேலும் பார்க்க