ஈரோடு: காலி மதுபாட்டில் விவகாரம், 3-வது நாளாக மூடப்பட்டுள்ள மதுபான கடைகள்!
'உப்பு புளி காரம்' சீசன் 2 எதனால் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' என மாற்றப்பட்டது? - ராஜ் ஐயப்பா பேட்டி
ஜியோ ஹாட்ஸ்டாரில் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ் நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது. 100 எபிசோடுகள் கொண்ட 'Long Format' வெப் சீரிஸாக இது வெளிவரவிருக்கிறது.
நடிகர் போஸ் வெங்கட், மெட்டி ஒலி காயத்ரி, ராஜ் ஐயப்பா எனப் பலரும் இந்த சீரிஸில் நடிக்கிறார்கள். சீரிஸ் வெளிவரத் தொடங்கியிருக்கும் நிலையில் நடிகர் ராஜ் ஐயப்பாவுடன் பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசிய ராஜ் ஐயப்பா, "'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ் ரொம்பவே ஜாலியாகப் போகும். மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி. இவர்களைச் சுற்றி நடக்கிற விஷயங்கள்தான் இந்த 100 எபிசோட் கொண்ட சீரிஸின் கதை.
இதுல நானும் என்னுடைய தங்கச்சி நம்ரிதாவும் சேர்ந்து நடிச்சிருக்கோம். இப்படியான சீரிஸ் தொடங்கப்போவதாகவும், அதில் நான் நடிக்கிறேன்னும் இயக்குநர் சிதம்பரம் எனக்கு முன்னாடியே சொல்லிட்டார்.
பிறகு ஆடிஷன் சமயத்துல அவர் நம்ரிதாவையும் ஒரு கேரக்டருக்கு ஆடிஷன் வரச் சொல்லிக் கேட்டார். அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஆடிஷனுக்குப் போனோம். இன்னொரு ஸ்பெஷலான விஷயம் என்னன்னா, என்னுடைய அப்பாதான் (நடிகர் பானு ப்ரகாஷ்) இந்த சீரிஸிலும் எனக்கு அப்பாவாக நடிக்கிறார்.
நாங்க மூணு பேரும் சேர்ந்து நடிக்கிறது ரொம்பவே ஸ்பெஷல்! அம்மாவும் எங்களை ஒன்றாகப் பார்க்கிறதுக்கு ஆசையோட காத்திருக்காங்க." என்றவரிடம், "இந்த சீரிஸ் 'உப்பு புளி காரம்' சீரிஸின் 2-வது சீசனாக தொடங்கப்பட்டது என்றார்களே, அது உண்மையா? எதனால் தலைப்பு மாற்றப்பட்டது?" எனக் கேட்டோம்.

அவர், "ஆமா, தொடங்கப்பட்டதுமே பலர் இது 'உப்பு புளி காரம் 2'-வான்னு கேட்டாங்க. ஆனா, இது ஒரு குடும்பத்திலிருக்கும் ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்-களின் கதை. உப்பு புளி காரம்'ங்கிற டைட்டில் மற்ற மொழிகள்ல அதற்கான ரீஜனல் ரீச் கிடைக்காது. 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்'ங்கிற டைட்டில் பொதுவானதாக இருக்கும். எல்லோருக்கும் போய் சேரும்ங்கிறதுனாலதான் இந்த டைட்டில் மாற்றம்" என்றார்.

















