செய்திகள் :

`அவரைச் சந்திக்க விரும்பியதில்லை' - தந்தையின் பெயரை பயன்படுத்தாதது குறித்து நடிகை தபு விளக்கம்

post image

தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம் உட்பட சில படங்களில் நடித்திருக்கும், பிரபல பாலிவுட் நடிகை தபுவிற்கு 54 வயதாகிறது. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

தபு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தபு தனது தந்தை பெயரை தனது பெயருக்குப் பின்னால் பயன்படுத்தாது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''நான் எனது தந்தையைச் சந்தித்ததும் இல்லை. அவரது பெயரை பயன்படுத்துவதும் கிடையாது.

தபு

எனக்கு 3 வயதாக இருந்தபோது என்னுடைய பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டனர். அதன் பிறகு எனது தந்தையுடன் எனக்கு எந்த வித தொடர்பும் கிடையாது.

எனது பெற்றோர் விவாகரத்து செய்து கொண்ட பிறகு நான் என்னுடைய பாட்டி (அம்மாவின் தாயார்) வீட்டில் வளர்ந்து வந்தேன். எனது அம்மா ஓர் ஆசிரியை. இதனால் அதிகமான நேரத்தை எனது பாட்டியுடன் கழித்தேன். எனது பாட்டி புத்தகம் படிப்பது, பிரார்த்தனை செய்வது என்று நேரத்தை செலவிட்டார். நானும் அது போன்ற ஒரு சூழலில் வளர்ந்தேன். எனவே நான் எனது தந்தையை சந்திக்க விரும்பவில்லை. எனது தந்தையின் பெயரை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தேன். எனவேதான் எனது பெயருக்குப் பின்னால் அவரது பெயரை சேர்க்கவில்லை.

எனது தந்தையின் பெயர் ஹஸ்மி. எனது முழு பெயர் தபசும் பாத்திமா ஆகும். பள்ளியில் எனது சர்நேம் பாத்திமா ஆகும். எனது தந்தையை பற்றிய எந்த நினைவும் என்னிடம் இல்லை. எனது சகோதரி ஒரு முறை அவரை சந்தித்து இருக்கிறார். ஆனால் நான் அவரை சந்திக்க விரும்பவில்லை. நான் இப்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்'' என்றார்.

திருமணம் செய்யாமல் வாழ்வது குறித்து கேட்டதற்கு, ''நான் அதை பற்றி கவலைப்படவில்லை. நான் தனியாக இருக்கிறேனா அல்லது திருமணம் செய்திருக்கிறேனா என்பது பிரச்னை இல்லை'' என்று தெரிவித்தார்.

Mrunal Thakur: "காதல் உங்களைச் சிறந்த மனிதனாக்குகிறது" - நடிகை மிருணாள் தாகூர்

நடிகை மிருணாள் தாகூர் காதலைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''காதல் என்பது ஒரு அழகான உணர்வு. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அது நிகழ வேண்டும... மேலும் பார்க்க

Bollywood: ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு; மர்ம நபர்களுக்கு வலை; என்ன நடந்தது?

பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, சிங்கம், கோல்மால் உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். மும்பையில் அவரது வீடு ஜுகுவில் இருக்கிறது.இன்று அதிகாலையில் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது மர்ம நபர்கள... மேலும் பார்க்க

Aamir Khan: "நான் விவாகரத்து செய்ததற்கு அதுவும் ஒரு காரணம்" - ஆமீர் கான் ஓப்பன் டாக்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு முறை விவாகரத்து ஆனவர். தற்போது நேர்காணல் ஒன்றில் தனது வெற்றி தோல்விகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.சமீபத்தில் பத்திரிகை ஆசிரியர் ராஜ் ஷாமானியுடனான உரையாடலில்... மேலும் பார்க்க

"ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள், மார்க்கெட்டிங்" - பாலிவுட் சினிமா குறித்து பிரகாஷ் ராஜ் காட்டம்

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது.இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கி... மேலும் பார்க்க

Mouni Roy: "'சார் உங்களின் கையை எடுங்கள்' எனச் சொன்னதால் ஆபாச வார்த்தையில் திட்டினர்!" - மெளனி ராய்

பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்த மௌனி ராய், தமிழ் மக்களுக்கு 'நாகினி' தொடர் மூலம் பெரியளவில் பரிச்சயமானார். சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், அவருக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை அவருடைய இன்ஸ்டா... மேலும் பார்க்க

Sikandar: "முதலில் கதை சுவாரஸ்யமானதாக இருந்தது; ஆனால், பிறகு நடந்தவை.!" - ராஷ்மிகா மந்தனா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு 'மதராஸி', 'சிக்கந்தர்' என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மதராஸி' படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாலிவுட் படமான 'சிக்... மேலும் பார்க்க