செய்திகள் :

ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

post image

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 47 வயது நபர், அபுதாபியில் பொறியாளராக வேலைச் செய்கிறார். இவர், அண்மையில் விடுமுறை எடுத்துக்கொண்டு காட்பாடியிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு முகம் தெரியாத யாரோ ஒரு மர்மநபர் `` `PZENA App’-ல் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம்’’ என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

பொறியாளரும் அதை நம்பி, மர்மநபர் அனுப்பிய லிங்க் வாயிலாக PZENA App-ஐ டவுன்லோடு செய்து, அதில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார். முதலில், பத்தாயிரம் ரூபாய் லாபம் வந்ததைபோல, மர்மநபர் பணம் அனுப்பியிருக்கிறார். இதனால், ஆர்வமடைந்த பொறியாளர் டிரேடிங் செய்வதற்காக மேலும் பணம் செலுத்தியிருக்கிறார்.

தொடர்ந்து, அதிக லாபம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதைபோல மெசேஜ் அனுப்பப்பட்டதால், ரூ.3.24 கோடி பணத்தை முதலீட்டுக்காக பல்வேறு கட்டமாக செலுத்தியிருக்கிறார் பொறியாளர்.

சைபர் கிரைம் மோசடி

இதையடுத்து, பணத்தை பரிவர்த்தனை மூலமாக திரும்ப பெற முயன்றபோது, மேலும் குறிப்பிட்டத் தொகையை செலுத்துமாறு அந்த ஆப்பில் இருந்து தகவல்கள் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தன. அதன் பிறகே, `இது ஒரு மோசடி ஆப்’ என்பதையும், தான் ஏமாற்றப்பட்டிருப்பதையும் அந்த பொறியாளர் தெரிந்துகொண்டார்.

உடனடியாக, 1930 எண்ணில் தொடர்புகொண்டு சைபர் கிரைமில் புகாரை பதிவு செய்தார். இப்புகார் தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

``இதுபோன்று, பொதுமக்கள் யாரும் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடகங்களில் முதலீடு, வீட்டிலிருந்தே வேலை (Investment, Online Trading, Online Part Time Job, Work From Home) சம்பந்தமாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். மேலும், ஏ.பி.கே ஃபைல் பதிவிறக்கம் செய்யவோ மற்றும் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம்’’ என்றும் சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்... மேலும் பார்க்க

சென்னை: செக்ஸ் டார்ச்சர்; மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் கொலை - சிறுவனுடன் கைதான தோழிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரக்சிகா என்பவரைக் காதலித்தார். ஆனால் இவர்களுக்குள் கருத்துவ... மேலும் பார்க்க

வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீ... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொ... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் பெர... மேலும் பார்க்க