செய்திகள் :

`ஆபாச பேச்சு' - பிரபல இன்ஸ்டா தம்பதி கிருஷ், ஐஸ்வர்யா மீது சைபர் க்ரைமில் புகார்!

post image

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம்  மூலம் பிரபலமடைந்த தம்பதி கிருஷ் - ஐஸ்வர்யா. இவர்களது சமூக வலைதள பக்கங்களை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியின் சமூக வலைதள பக்கத்தில்  ஆபாச தன்மை கொண்ட காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஆபாச இணையதளம் விளம்பரப்படுத்தப்படுவதாகவும் கோவை சைபர் கிரைம் காவல் துறையில் வழக்கறிஞர் நவேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்- ஐஸ்வர்யா
கிருஷ்- ஐஸ்வர்யா

இந்த வீடியோக்கள் சிறுவர்கள் உட்பட பொதுமக்களை போர்னோகிராபி கன்டென்டுகளை ஈர்க்கும் வகையிலும், ஆபாச திரைப்படங்களில் நடிப்பதை பெருமைப்படுத்தி சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டங்களின் கீழ் இது குற்றம்  என்றும்,  சமூக வலைதளங்கள் மூலம் ஆபாச இணையதளங்களை விளம்பரப்படுத்துவது இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் மனநலத்திற்கும் சமூக ஒழுக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும், பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருஷ்- ஐஸ்வர்யா
கிருஷ்- ஐஸ்வர்யா

பிரபல இன்ஸ்டா தம்பதி கிருஷ் மற்றும் ஐஸ்வர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும், சம்பந்தப்பட்ட ஆபாச காணொளிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் நவேஷ் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`சாக அனுமதி தாருங்கள், மனைவியின் சித்ரவதை தாங்கமுடியவில்லை'- குஜராத் வாலிபர் கலெக்டருக்கு கடிதம்

குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர் கிரித் பட்டேல். இவருக்கு முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் குழந்தைகள் இருக்கின்றன. தற்போது இரண்டாவது மனைவிக்கும... மேலும் பார்க்க

ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் பெண்; ₹60,000 மாத வருமானம்! ஏன் இந்த முடிவு?

காலை 9 மணி லாகின், இரவு 9 மணி லாக் அவுட், நடுநடுவே காதைக் கிழிக்கும் மீட்டிங்குகள், நள்ளிரவில் வரும் 'ப்ரொடக்‌ஷன் இஷ்யூ' அழைப்புகள்... பல இளைஞர்களின் கனவாக இருக்கும் ஐடி வேலை, சிலருக்கு மன அழுத்தத்தின... மேலும் பார்க்க

7 நாடுகள், 23 துறைமுகங்கள் - உலகம் முழுக்க கொகைன் சப்ளை செய்துவிட்டு இந்தியா வந்து சிக்கிய கப்பல்!

குஜராத் மாநிலம் முந்த்ராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில் கடலோர பாதுகாப்பு படையினர் ரெய்டு நடத்தினர். இதில் 115 கிலோ கொகைன் போதைப்பொருள் இருந்தது க... மேலும் பார்க்க

`கூண்டுக்குள்' குழந்தைகள்.. கைகொடுக்கும் செல்லப்பிராணிகள்; 'Pet parenting' தரும் ஆச்சர்ய மாற்றங்கள்!

"அம்மா... டாமிக்கு சாப்பாடு வெச்சாச்சா?"நாய் அல்லது பூனை வளர்க்கும் வீடுகளில், குழந்தைகள் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. வீட்டைக் காக்க நாய்களும், எலிகளைப் பிடிக்க பூனைகளையும் வளர்த்த காலம் மாறிவிட்டது... மேலும் பார்க்க

மும்பை: 150 ஆண்டுகளாக இந்தியர்களுக்கு அனுமதி இல்லை; ஐரோப்பியர்களால் நடத்தப்படும் கிளப் தெரியுமா?

டெல்லியில் பிரதமர் வீட்டிற்கு அருகில் 27 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் ஜிம்கானா கிளப்பில் பணக்காரர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த கிளப்பை ... மேலும் பார்க்க