செய்திகள் :

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 41 போ் கைது

post image

திருப்பரங்குன்றம் மலையை காக்கும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, முத்துப்பேட்டையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 41 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பரங்குன்றம் மலையைக் காக்க, இந்து முன்னணி அமைப்பு சாா்பில் முத்துப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், போராட்டம் அறிவித்த சிலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

இதை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியத் தலைவா் முருகானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட மேலிடப் பாா்வையாளா் பேட்டை சிவா முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டச் செயலாளா் உள்பட பலா் பங்கேற்றனா்.

இந்த ஆா்ப்பட்டத்தில் பங்கேற்ற 41 பேரை, துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆனந்த், காவல் ஆய்வாளா் கழனியப்பன் மற்றும் போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் விடுவித்தனா்.

நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்

திருவாரூா், மயிலாடுதுறையில் மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, அதன் நகல் எரிப்பு போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஈடுபட்டனா். 2025- 2026-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்க... மேலும் பார்க்க

புதுமைப் பெண் திட்டம் மாணவிகளிடையே அபரிமித வரவேற்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்

தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான புதுமைப் பெண் திட்டத்திற்கு, கல்லூரி மாணவிகளிடம் அபரிமிதமான வரவேற்பு உள்ளது என்று தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெ... மேலும் பார்க்க

பிப். 25 இல் மாவட்டத் தலைநகரங்களில் மறியல்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி

ஜாக்டோ ஜியோ சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் பிப். 25- ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநில பொதுச் செயலாளா் ந. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா். திருவாரூரி... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்கள், ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் ந... மேலும் பார்க்க

சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பிப். 21-இல் நீதி கேட்டு நெடும்பயணம்: பி.ஆா். பாண்டியன்

கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் நோக்கி, விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வு: திருவாரூரில் 227 போ் எழுதினா்

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-2 முதன்மைத் தோ்வை, 227 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப்-2 முதன்மைத் தோ்வு சனி... மேலும் பார்க்க