செய்திகள் :

'இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய அந்த 45 நிமிட பயிற்சி!' - ரகசியம் என்ன தெரியுமா?

post image

தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்திய பெண்கள் அணி வெல்லும் முதல் உலகக்கோப்பை என்பதால் இது ஒரு வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது. போட்டிக்கு முந்தைய நாளில் ஒரு 45 நிமிடங்களுக்கு இந்திய வீராங்கனைகள் செய்த ஒரு பயிற்சி அவர்கள் வெற்றி பெற காரணமாக அமைந்ததாக வீராங்கனைகளே கூறியிருக்கின்றனர்.

Team India
Team India

ஜெமிமா பேசுகையில், 'இந்த வெற்றி எங்களுக்கானது மட்டும் இல்லை. எங்களுக்கு முன்பு ஆடியவர்களுக்கும்தான். அதுமட்டுமல்ல இது வருங்கால சந்ததியினருக்கானதும் கூட. பெண்கள் கிரிக்கெட் எப்படி மாறப் போகிறது என காண ஆவலாக இருக்கிறேன். இது கனவு போல இருக்கிறது. இந்த இடத்தில் இருக்க நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

வெற்றி தோல்வி இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென நினைத்தோம். நாங்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை குறிப்பாக செய்தோம். அது 'Visualisation'. போட்டிக்கு முந்தைய நாளில் மைதானத்தில் 45 நிமிடங்கள் அமர்ந்து நாங்கள் உலகக்கோப்பையை வென்றதை போல மனதுக்குள் சித்திரமாக ஓட்டி பார்த்துக்கொண்டோம். இந்தியா உலக சாம்பியன்ஸ் 2025 என்பது எங்களின் மனதுக்குள் ஓட்டிக்கொண்டே இருந்தோம். அந்த 'Visualisation' பயிற்சி எங்களின் வெற்றிக்கு பெரியளவில் உதவியது.' என்றார்.

Team India
Team India

ஸ்மிருதி மந்தனா பேசுகையிலும் இந்த 'Visualisation' பயிற்சி பற்றி கூறியிருந்தார். அவர் பேசியதாவது, 'நேற்று ஒரு 'Visualisation' செஷனில் கலந்துகொண்டோம். நாங்கள் உலகக்கோப்பையை வென்றதைப் போல மனதுக்குள் சித்திரத்தை ஓடவிட்டுக் கொண்டோம். அது எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது.' என்றார்.

நாம் செய்ய நினைப்பவற்றை முன்பாகவே மனதுக்குள்ளாக அசைபோட்டு, அதை செய்வதற்கான உத்வேகத்தையும் நேர்மறை எண்ணத்தையும் 'Visualisation' முறைப்படி பெற முடியும் என்கின்றனர். உலகளவில் சாதிக்கும் பல விளையாட்டு வீரர்களுமே இந்த 'Visualisation' பற்றி நம்பிக்கையோடு நிறைய பேசியிருக்கின்றனர்.

'திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டின் பொற்காலம்!' - உதயநிதி பெருமிதம்!

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்ட... மேலும் பார்க்க

உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் ... மேலும் பார்க்க

`எனது தாத்தா சொன்னார்' - இந்திய அணிக்கு விளையாட குடியுரிமையை சரண்டர் செய்த ஆஸி., கால்பந்து வீரர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அடிப்படையில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவார். வில்லியம்ஸ் குடும்பத்தினர் அவரது ... மேலும் பார்க்க

Ind v Aus: "இந்தியாவிடம் அடைந்த தோல்வி இன்னும் வலிக்கிறது"- ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹீலி

கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்... மேலும் பார்க்க

`RCB அணி விற்பனைக்கு.!’ - விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி - அணியின் மதிப்பு தெரியுமா?

ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த டி... மேலும் பார்க்க