செய்திகள் :

`இந்திய சட்டத்தை பின்பற்றாவிடில் இங்கிருந்து வெளியேறுங்கள்' - வாட்ஸ்அப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

post image

அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிர்வாகம் தனக்கென தனியுரிமைக் கொள்கையை வகுத்துள்ளது. இக்கொள்கையின் அடிப்படையில் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு வாட்ஸ்அப் நிர்வாகம் கொடுத்துக்கொண்டிருந்தது. இதையடுத்து வாட்ஸ்அப் நிர்வாகத்திற்கு மத்திய அரசின் காம்பெட்டீசன் கமிஷன் ஆஃப் இந்தியா ரூ.213 கோடி அபராதம் விதித்து இருந்தது. அதை எதிர்த்து மெட்டா நிறுவனமும், வாட்ஸ்அப் நிர்வாகமும் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தன. இம்மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில் விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி சூர்யகாந்த், ''தரவு பகிர்வு என்ற பெயரில் இந்த நாட்டின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது. நீங்கள் உறுதிமொழி வழங்காத வரை தரவின் (டேட்டா) ஒரு வார்த்தையைக்கூட பகிர்ந்து கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

குடிமக்களின் தனியுரிமையை நீங்கள் மீற முடியாது, நாட்டின் விதிகளுக்கு கட்டுப்பட முடியாவிட்டால், இந்தியாவை விட்டு வெளியேறலாம்" என்று அவர் கூறினார்.

உடனே அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, வணிக நோக்கங்களுக்காக பயனர் தரவைப் பகிர்வதாக வாட்ஸ்அப்பை விமர்சித்தார். இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி சூர்யகாந்த், ``இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பின்பற்றவில்லையெனில் இந்தியாவில் இருந்து வெளியேறலாம். பொதுமக்கள் யாரின் தனியுரிமையிலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.

வாட்ஸ்அப் நிர்வாகத்தின் தனியுரிமை சட்டத்தை, படிக்காத மற்றும் ஏழை மக்களால் புரிந்து கொள்ள முடியுமா? தெருவில் வியாபாரம் செய்யும் நடைபாதை வியாபாரி, ஏழை பெண்கள் அல்லது தமிழ் மட்டுமே பேசத்தெரிந்தவர்களால் இந்த தனியுரிமைக் கொள்கையைப் புரிந்து கொள்ள முடியும?

டாக்டர் வாட்ஸ்அப்பில் மருந்துகள் பட்டியலை அனுப்பினால் நீங்கள் உடனே விளம்பரத்தை ஓடவிடுகிறீர்கள்'' என்று தெரிவித்தார். 2024ம் ஆண்டு வாட்ஸ்அப் வெளியிட்ட தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில் பயனர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டுமானால் மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களுடன் பயனர்களின் தரவுகளை பகிர்ந்து கொள்ள பயனர்கள் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்தே வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிதைந்த மில்லியன் டாலர் கனவு; ரீல்ஸ் மோகத்தில் கார் ஏற்றிக் கொன்ற சிறுவன்; தாயின் தீராத வேதனை!

டெல்லி துவாரகா பகுதியில் நடந்த கோரமான கார் விபத்து, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. 23 வயதான சாஹில் தனேஸ்ராஎன்ற இளைஞர், சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரி... மேலும் பார்க்க

தட்டில் முடி இருந்தது உண்மைதான்... ஆனா போட்டது யாரு? கேமராவைத் திருப்பிய ஹோட்டல்: Trending video

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற 'தி ராக்ஸ்' பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு உணவகத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவக... மேலும் பார்க்க

திடீரென வீலிங் செய்த இளைஞர்; நிலைதடுமாறிய பின்னால் அமர்ந்திருந்த பெண்.. விபரீதத்தில் முடிந்த சாகசம்!

மும்பையின் பிரதான சாலையில் வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். இதனால் பின்னால் இருந்த பெண்ணும் எந்தவித முன்னெச்சரிகையும்... மேலும் பார்க்க

24வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்: மாற்றத்தை உருவாக்கிய 5 மாற்று திறனாளி சாதனையாளர்களுக்கு கௌரவம்!

தடைகளைத் தாண்டி மாற்றத்தை ஊக்குவிக்கும் கதைகளை கொண்டாடும் வகையில்,கவின்கேர்நிறுவனம்எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன்இணைந்து24வதுகவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2026விழாவை ஏற்பாடு செய்தது. நாடு முழுவதும் பல்வேறு ... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இந்தியா வருகை; இன்று மோடியுடன் சந்திப்பு! - முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 3 நாள் பயணமாக இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் ஆச்சாரியா, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, ... மேலும் பார்க்க

ரூ.60 கோடி சொத்து; வாரிசு இல்லாமல் விட்டுச்சென்ற பெண் டாக்டர் - உரிமை கோரி முட்டி மோதும் உறவுகள்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் டாக்டர் ஹேமலதா(81). கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த டாக்டர் ஹேமலதா இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் வி... மேலும் பார்க்க