TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா...
"இந்த வெற்றி இன்னும் இனிக்கிறது"- சிம்புவின் 'மாநாடு' படம் குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’.
இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார்.

இப்படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'மாநாடு' படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " எனக்கு, எஸ்டிஆருக்கு, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது மாநாடு படத்தின் மீது.
கோவிட் தாமதம் மற்ற தாமதங்கள் நிகழ்ந்தபோதும் அந்தப் படத்திற்கு ஒரு பாஸிட்டிவிட்டி இருந்துகொண்டே இருந்தது.
வெளியிலிருந்தும், படத்தின் குழுவிலிருந்தும் நம்பிக்கை பரவிக்கொண்டே இருந்தது.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டைப்பயிற்சி, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, லைட் மேன்ஸ், தயாரிப்பு நிர்வாகம் செய்த அனைவரும் தந்த உண்மையான உழைப்பே மாபெரும் வெற்றிக்குக் காரணம்.
எனக்கு, எஸ் டி ஆருக்கு, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது மாநாடு படத்தின் மீது.
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2025
கோவிட் தாமதம் மற்ற தாமதங்கள் நிகழ்ந்த போதும் அந்தப் படத்திற்கு ஒரு பாஸிட்டிவிட்டி இருந்துகொண்டே இருந்தது.
வெளியிலிருந்தும், படத்தின் குழுவிலிருந்தும் நம்பிக்கை பரவிக் கொண்டே… pic.twitter.com/RqB61GoDHN
நான்கு வருடங்கள் தொட்டாலும் இந்த நிஜமான வெற்றி இன்னும் இனிக்கிறது. எஸ்டிஆரின் ரசிகர்கள் வைத்த நம்பிக்கை வெற்றிக்கு வித்திட்டது.
உடன் நின்ற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி." என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

















