செய்திகள் :

இன்று நீட் மறுதேர்வு: 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்; தர்மேந்திர பிரதான் வாழ்த்து!

post image

கடந்த மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.

ஆனால், டெலிகிராமில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால், மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று (ஜூன் 21) நீட் மறுதேர்வு நடத்தப்படுகிறது.

3 மணிநேரம் 15 நிமிடங்கள் நடக்கும் இந்தத் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.15 வரை நடக்க இருக்கிறது.

தரவுகளின் படி, இன்று 22 லட்சம் மாணவர்கள் நீட் மறுதேர்வு கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

இந்தத் தேர்வு குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இன்று நீட்-யுஜி மறுதேர்வு நடைபெறவிருக்கிறது. தேசிய தேர்வு முகமை (NTA), அனைத்து மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், இந்தியக் கல்வித் துறை மற்றும் குறிப்பாக இந்தியாவின் மாணவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதவுள்ளனர். எந்தவொரு பயமும் கவலையும் இன்றி தைரியமாகத் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

நீங்கள் நிச்சயம் சிறப்பாகச் செய்வீர்கள். மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களுக்கு இந்தியாவின் கட்டமைப்பு மீது நம்பிக்கை இருக்கிறது. அது எப்போதும் தொடரும்; இந்த அசைக்க முடியாத நம்பிக்கை இப்படியே நீடிக்கட்டும்.

இந்தத் தருணத்தில், ஒரு பெற்றோராகவும் ஒரு சமூக ஆர்வலராகவும் உங்களிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்: தயவுசெய்து இந்தியாவின் புதிய தலைமுறையின் எதிர்காலத்தைப் பணயம் வைக்காதீர்கள். யாரும் அதை ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றிவிட வேண்டாம்." என்று பேசியுள்ளார்.

AI யுகம் - சீனாவில் 12,000 பட்டப்படிப்புகள் நீக்கம்: மறுசீரமைக்கப்படும் கல்விமுறை!

செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில், சீனப் பல்கலைக்கழகங்கள் தங்களின் கல்வி முறையில் மிகப்பெரிய மறுசீரமைப்பைச் செய்து வருகின்றன. பழைய பாடத்திட்டங்களை நீக்கிவிட்ட... மேலும் பார்க்க

நெல்லை பள்ளிகள் திறப்பு: 'மலர் மாலைகள், கிரீடங்கள், இனிப்புகள்' - மாணவர்களுக்கு வரவேற்பு | Photos

திருநெல்வேலி: பள்ளிகள் திறப்பு! மலர் மாலைகள்! கிரீடங்கள்! இனிப்புகள் வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு.!பெரம்பலூரில் விதைக்கப்பட்ட 'ஆர்வம்' - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய கற்றல் உலகம் மேலும் பார்க்க

திருநெல்வேலி: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு; ஸ்பாட் விசிட் செய்த ஆட்சியர் | Photo Album

திருநெல்வேலி:கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு! பள்ளிகளில் ஸ்பாட் விசிட் ஆய்வு செய்த ஆட்சியர்பெரம்பலூரில் விதைக்கப்பட்ட 'ஆர்வம்' - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய கற்றல் உலகம் மேலும் பார்க்க

"அதிகாரிகள் பதவி விலக வேண்டும்!" - சிபிஎஸ்சி விடைத்தாள் குளறுபடி குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்காகப் புதிய மின்னணு மதிப்பீட்டு முறையான 'திரைவழி மதிப்பீட்டு முறையை' (OSM - On Screen Marking) அற... மேலும் பார்க்க

வேளாண்மை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முதல் ITI வரை: படிப்பு, கடைசி தேதி - முழு விவரம்!

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் சேரலாம்? என்ற ஆலோசனையிலும் தேடலிலும் மாணவர்களும் பெற்றோர்களும் தீவிரமாக இருப்பீர்கள். உங்கள் சுமையைக் குறைக்கும் வகையில்... மேலும் பார்க்க