செய்திகள் :

'இன்ஸ்டாவில் பாலிவுட் பிரபலங்களை Unfollow செய்தது ஏன்?' - இயக்குநர் கரண் ஜோகர் விளக்கம்

post image

பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தி இயக்கியும் இருக்கிறார். அவர் திடீரென இன்ஸ்டாகிராமில் ஷாருக் கான், ரன்வீர் சிங், கரீனா கபூர் கான், ஜான்வி கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், ஷனாயா கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களை அன்ஃபாலோ செய்திருக்கிறார்.

இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் திடீரென அனைவரையும் ஃபாலோ செய்யாமல் வெளியேறிவிட்டார் என்ற விவாதம் எழுந்தது. இதற்கு உண்மையான காரணத்தை கரண் ஜோகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஒரு டிஜிட்டல் டிடாக்ஸ் (டிஜிட்டல் உலகிலிருந்து தற்காலிக விலகல்). இன்ஸ்டாகிராமில் நான் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் குறைப்பதற்காக அனைவரையும் அன்ஃபாலோ (unfollow) செய்கிறேன்.

கரண் ஜோகர்
கரண் ஜோகர்

கடவுளின் பொருட்டு இது ஒன்றும் தேசிய செய்தியாக இருக்க முடியாது... தயவுசெய்து வேறு எதற்காவது கிளிக்பைட் (clickbait) செய்தி போடுங்கள்! இது தேவையற்றது!" என்று எழுதியுள்ளார்.

திரைப்படங்கள், ஃபேஷன் மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உடையவர் கரண் ஜோகர். இருப்பினும், ஆன்லைன் உலகில் ஏற்படும் சத்தத்திலிருந்து தற்காலிகமாக விலகி இருப்பது தனது மன அமைதிக்கு அவசியமானது என்று இயக்குநர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பல பாலிவுட் பிரபலங்களை அன்ஃபாலோ (unfollow) செய்ததன் மூலம் வதந்திகளை ஏற்படுத்திய கரண் ஜோகர், யாருடனும் தனக்கு எந்தப் பிணக்கும் ஏற்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அனைவரையும் அன்பாலோவ் செய்தாலும், அவர் இன்னும் பிரியங்கா சோப்ராவைப் பின்தொடர்ந்து வருகிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் 'ஃபாலோயிங்' (following) எண்ணிக்கை 74 ஆக உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2026 மெட் காலா (Met Gala) சர்வதேச ஃபேஷன் ஷோவில், முதல் முறையாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கரண் ஜோகர் கலந்து கொண்டார்.

கரண் ஜோகர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தயாராகும் கங்குலியின் பயோபிக்; படப்பிடிப்பு தளத்திற்கு வந்த கங்குலி; யார், யார் நடிக்கிறார்கள்?

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி வரும் பயோபிக் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்திருக்கிறத... மேலும் பார்க்க

காந்தாரா விவகாரம்: 'சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்புக் கேட்ட ரன்வீர் சிங்' - கோயில் நிர்வாகம் தகவல்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர்-1' (Kantara Chapter-1) திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் குறித்து கோவாவில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், நடிகர் ரன்வீர் சிங் பேசினார... மேலும் பார்க்க

டான் 3: திடீரென வெளியேறிய ரன்வீர் சிங்; ரூ.45 கோடி கேட்கும் தயாரிப்பாளர்! - தொழிற்சங்கம் வைத்த செக்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் டான் 3 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதையடுத்து டான் 3 படத்தயாரிப்பு குழு படத்தயாரிப்புக்கு தேவையான வேலைகளில் இயக்குனர் பர்ஹான் அக்தர் ஈடுபட்டிருந்தார். ஆனால் திட... மேலும் பார்க்க

"சூழ்நிலைக் கட்டாயத்திற்காக உங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது! - ஐஸ்வர்யா ராய் அறிவுரை!

79-வது கான் திரைப்பட விழா நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. லோரியல் பாரிஸ் பிராண்டின் அம்பாசிடராகப் கான் திரைப்பட விழாவில் பல வருடங்களாக தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். இந்தாண்ட... மேலும் பார்க்க

பரோலில் வெளியே வந்து தப்பித்த கொலைக் குற்றவாளி; 12 ஆண்டுகள் பாலிவுட் நடிகராக வலம்; சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலத்தில் நடந்த கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவர் ஹேமந்த் நகின் தாஸ். 2005 ஆண்டு நடந்த கொலை ஒன்றில் ஹேமந்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவர் மகாசனா சிறையில் தண்டனை அனு... மேலும் பார்க்க

"எதிர்பாராத விதங்களில் வாழ்க்கையில் பயணிக்கும் கதை!" - நடிகராகும் ராஜ்குமார் ஹிரானியின் மகன்

பல கல்ட் கிளாசிக் பாலிவுட் திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ்குமார் ஹிரானி தற்போது “ப்ரீதம் அண்ட் பெட்ரோ” என்ற இணையத்தொடரை தயாரித்துள்ளார். இந்தத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத... மேலும் பார்க்க