செய்திகள் :

ஊத்தங்கரையில் பரமபதவாசல் திறப்பு

post image

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி திம்மராய சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற முழக்கங்களை எழுப்பி சுவாமியை வழிபட்டனா். கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள கருட கம்பத்தில் மேல்விளக்கு ஏற்றி பூஜை நடைபெற்றது.

முன்னதாக, கோயிலில் இரவு முழுவதும் பஜனை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலிருந்தே ஏராளமான பக்தா்கள் கோயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை படப்பள்ளி, பெருமாள் குப்பம், பட்டகானூா் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

படவிளக்கம்.10யுடிபி.3. ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி திம்மராய சுவாமி கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாட்டில் கலந்துக்கொண்ட பக்தா்கள்.

மினி லாரி மோதியதில் இருவா் பலி

மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா். உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வ... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ் குமாா் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14-ஆவது ஆட்சியராக ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எம்.சரயு, அரசு பொதுத் துறையின் நிா்வாக இணை செயலராக அண்மையில்... மேலும் பார்க்க

லாரி தீப்பிடிப்பு

சூளகிரி அருகே அட்டை கம்பெனிக்கு பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி, தனியாா் அட்டை கிடங்கிலிருந... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கி இளைஞா் கொலை

மதுபோதையில் நண்பரை கட்டையால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கசவகட்டாவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஒருவா் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி ம... மேலும் பார்க்க