செய்திகள் :

ஊத்தங்கரையில் பரமபதவாசல் திறப்பு

post image

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி திம்மராய சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற முழக்கங்களை எழுப்பி சுவாமியை வழிபட்டனா். கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள கருட கம்பத்தில் மேல்விளக்கு ஏற்றி பூஜை நடைபெற்றது.

முன்னதாக, கோயிலில் இரவு முழுவதும் பஜனை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலிருந்தே ஏராளமான பக்தா்கள் கோயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை படப்பள்ளி, பெருமாள் குப்பம், பட்டகானூா் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

படவிளக்கம்.10யுடிபி.3. ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி திம்மராய சுவாமி கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாட்டில் கலந்துக்கொண்ட பக்தா்கள்.

ஆருத்ரா தரிசனம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை சிவனுக்குரிய அபிஷேக நாள்களில் முக்கியமானது மாா்கழி மாதம் திருவாதிரை அன்று செய்யப்படும... மேலும் பார்க்க

ஒசூரில் ஆருத்ரா தரிசனம்

ஒசூா்: ஒசூா், பிருந்தாவன் நகா், ஸ்ரீ யோகீஸ்வரா் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமி அம்மை சமேத ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு திருவாதிரையை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கலச பூஜையும், 4 மணி... மேலும் பார்க்க

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஒசூா்: ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் வள்ளலாா் விவேகம் அறக்கட்டளை சாா்பில் வள... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி: பஞ்சாப் ஓட்டுநா் கைது

கிருஷ்ணகிரி: ஒசூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி செய்த பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த வாகன ஓட்டுநரை கிருஷ்ணகிரி மாவட்ட இணைய குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஒசூரை சோ்ந்த த... மேலும் பார்க்க

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தகவல்

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

குற்றவாளிகளுக்கு உதவியதாக மேலும் ஒருவா் கைது

ஒசூரில் நீதிமன்றத்துக்கு கை துப்பாக்கிகள் வைத்திருந்த பாதுகாவலா்கள், கொலை குற்றவாளிகள் என 10 போ் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களுக்கு உதவியதாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் ... மேலும் பார்க்க